உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மறைமலையம் -19

இல்லை; மண்ணானது குடமாகத் திரிக்கப்படுதல் போல, அம்மண்ணினின்று குடத்தை யுண்டாக்கும் அறிவுடைய ய னான குயவன் அங்ஙனந் திரிக்கப்படுதல் இலன். இன்னும், மண்ணினின்று குடம் முதலிய பாண்டங்களை உண்டாக்கும் முன்னரே, அவை தம்மையுண்டாக்குங் குயவனது அறிவின் கண் அப்பாண்டங்களின் வடிவங்கள் அமைந்து கிடத்தல் வேண்டும்; அங்ஙனம் அவ்வடிவங்கள் தன் அறிவின் கண் அமையப் பெறாதவன், அப் பாண்டங்களைச் சமைத்தற் குரிய அறிவு வாயாதவனாமாகலின், அவன் அவற்றை ஆக்க மாட்டுவான் அல்லன். ஆகவே, அறிவில்லாத மாயை யிலிருந்து இவ்வுலகங்களும் இவ் வுலகத்துப் பொருள்களும் வ்வுடம்புகளும் இவ்வு வ்வுடம்புகளில் அமைந்த கருவிகளும் படைக்கப்படுதற்கு முன்னரேயே, இவற்றை யெல்லாம் படைக்கும் இறைவனது பேரறிவின் கண் அப்பொருள்களின் உருவங்கள் அமைந்து கிடத்தல் வேண்டுமென்பது தெளியப் படும். எங்ஙனங் குயவனதுஅறிவின்கண் அமைந்த உருவங் களோடு ஒத்தவடிவுடைய பாண்டங்கள் மண்ணினின்றும் அவனாற் படைக்கப் படுகின்றனவோ, அங்ஙனமே இறைவனது அறிவின்கண்மைந்த உருவங்களோ டொத்த வடிவுடைய உலகமும் உடம்பும் பிறவும் மாயையினின்றும அவனாற் படைப்படுவனவாகும். எங்ஙனங் குடங்கள் முதலான பாண்டங்களின் வடிவு சிதைந்தழிந்தாலும் அவற்றோடொத்த அறிவினுருவங்கள் குயவனுள்ளத்தின் கண் அழியாவாய் நின்று அப்பாண்டங்களை மறித்தும் மறித்துந் தோற்றுவிக்குமோ, அங்ஙனமே இவ்வுலகங்களும் இவ்வுடம்புகளும் பிறவும் சிதைந்து அழிந்தாலும் அவற்றோ

ஈத்த அறிவினுருவங்கள் இறைவன் றிருவுள்ளத்தின்கண் அழியாவாய் நின்று அவை தம்மை மீண்டும் மீண்டுந் தோற்றுவியா நிற்கும். இதுகொண்டு, மாயையின் வடிவு அழிதல்போல, றைவனது அறிவுருவு அழிவதன் றென்பதூஉந் தெற்றென விளங்கும்.

இன்னும், அறிவுடையோன் என்று உயர்த்துச் சொல்லப் படுபவன், தான் உணர்ந்த பொருள்களின் வடிவங்களோ டொத்த உருவங்களைத் தன் அறிவின்கண் ஐயந்திரிபின்றி அமைத்துக் கொண்டவனேயாவனென் பதூஉம், அறிவில்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/59&oldid=1585645" இலிருந்து மீள்விக்கப்பட்டது