உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

27

தோன் என்று இழித்துச் சொல்லப்படுபவன் தான் கண்ட எந்தப் பொருளின் வடிவத்தையுந் தன்னுள்ளத்தின்கண் அமைத்துக் கொள்ள மாட்டாதவனேயாவ னென்பதூஉம், இறைவனறிவு இம்மாயையிற் காணப்படும் எல்லா வடிவு б களையும் முன்னரே யறிந்த உருவுகளுடையதாயிருப்பி னல்லது ப்பருப்பொருள் வடிவுகள் தாமே தோன்றா வாகலின் இறைவனது பேரறிவு இவையெல்லா வற்றையுந் தன்னகத்தடக்கிய உருவுடையதாயே திகழுமென்பதூஉம் பிறவுங் “கடவுளுக்கு அருளுருவம் உண்டு என்னும் எமது கட்டுரையில் நன்கு விளக்கியிருக்கின்றேம்; அவ்விரி அதன்கட் காண்மின்கள்!

அஃதொக்கும், இறைவனறிவு உருவுடையதாயே நிற்குமெனின், அதனை அருவென்று கூறுதல் என்னை யென்பார்க்கு, உயிர்களும் உயிர்களின் அறிவுங் கண் முதலிய பொறிகளுக்குப் புலனாகாமைபற்றி அருவென்றும், உயிர்களின் அறிவு கட்புலனாக விடினும் புறப்பொருள்களில் தான் கருதிய வடிவினை அமைத்தல் கண்டு அதனறிவு அவ்வடிவினோடொத்த உருவுடைய தென்றுங் கொள்ளுதல் போல, இறைவனும் இறைவன்றன் பேர் அறிவும் பொறி களுக்குப் புலனாகாமை பற்றி அருவென்றும், அங்ஙனமாயினும் அவன்றன் பேரறிவு எண்ணுதற்கடங்கா இத்தனையுடம்பு களையும் அமைத்திருத்தல் கொண்டு இவற்றின் வடிவுகட்கு முதலான உருவுகள் வாய்ந்த பேரறிவினாலேயே அவனிருப்ப னென்றும் விடுத்தல் வேண்டும். எனவே, அறிவெல்லாம் அழியா வுருவங்களுடையவாயேயிருக்கு மென்பதூஉம், அன்னவாயினும் அவை ஊனுடம்பில் அமைந்த பொறிகளின் வாயிலாக அறியப்படாமல் மாசற்ற அறிவுக்கண் கொண்டே காணப்படு மென்பதூஉம் நினைவிற் பதிக்கற்பாலனவாகும். திருஞானசம்பந்தர் மூன்றாட்டைச் சிறுமகவாயிருந்தஞான்று கண்டு பாடிய இறைவனுருவம், அவர் தந்தையார் கண் களுக்குப் புலனாகாமல் அவர்க்குமட்டும் புலனான தன்மையை யுற்றுநோக்குங்கால், அவர் கண்ட இறைவனுருவம் அறிவுருவமேயல்லாது ஊனுருவம் அன்றென்பதூஉம், அவரதனைக் கண்டதுந் தமது அறிவுக் கண் கொண்டே யல்லாது ஊனக்கண் கொண்டன் றென்பதூஉம் பகுத்துணர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/60&oldid=1585646" இலிருந்து மீள்விக்கப்பட்டது