உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மறைமலையம் 19

ளம்

னி,

யதன்கண் உருவி நுழைந் தாராய்வான் புகுந்தன. அங்ஙனம் ஆராய்ச்சி நிகழ்த்த காலத்திலேதான் சிறுமகார் பால் நாவினாற்பிறக்குஞ்சொற் காண்டல் அரிதென்பதெமக் கினிது விளங்கிற்று. இனி நாவினாற் பிறக்கும் ஒலிகொண்டு மிழ்ச் சொற்கள் தொடங்காமை என்னை யென்னும் ஐயப்பாட்டிணை ஈண்டாராயலுறின், தமிழ்மொழி தோற்றமுற்ற பண்டைக் காலத்தே அதனை வழங்கிய மக்கள் றுப்புக்கள் உரமேறியரிது முயற்சி செல்லாத பருவத்தே சொற் சொல்லுந் திறமை யறிதலுறுவா ராயினா ரென்பதூஉம் அப்பருவத்தே முற்பட்டுத் தோற்றமுற்ற மொழி தமிழே யாமென்பதூஉம் நன்றுணரக் கிடக்கின்றன. வடமொழி, இலத்தீன், கிரேக்கு, இப்புரு முதலான மொழிகளிலே நாவினாற் பிறக்கு மொலியெழுத்துக்கள் முதற் கொண்டெழுந்த சொற்கள் காணக்கிடத்தலின், அம்மொழி களெல்லாந் தம்மை வழங்கிய மக்கள் உறுப்புரம் பெற்று வேண்டியவாறு இயக்கும் பிற்பருவத்தே தோற்றமுற்றெழுந்த இயல்பினவாதல் வெள்ளிடை மலைபோல் விளக்கமுடைய தாகின்றது. எனவே, வடமொழி முதலான நாற்பெரும் மொழிகளும் தோற்றமுற் றெழுதன் முன்னரே, தமிழ்ச் செஞ்சொல் தோற்றமுற்றெழுந்த தொன்மை மாட்சி இனிது விளங்கலின், தமிழ் ஏனை எல்லா மொழிகளினும் பழை தாமென நிறுவுதற்கு யாமெடுத்துக்கொண்ட மேற்கோள் வாய்ப்புடையதாமாறு காண்க.

அற்றேலஃதாக, ட், ண் முதலான அவ்வெட்டு மெய்யெழுத்துக்கள் தமிழ்மொழியிற் காணப்படுதலும் அதன் றொன்மை மாட்சிக்கு ஓரிழுக்காமா லெனின்;- அறியாது கடாயினாய், தமிழ் வழங்கு மக்கள் உறுப்புரமேறிய பிற் காலத்தே தோற்றமுற்றெழுந்த அவ்வெழுத்துக்கள் மொழி யிடைப் படுத்து வழங்கக் காண்டலின் அஃதிழுக்காது. அல்லதூஉம், மொழிமுதலிலே நாவெழுத்துக்கள் தொடங்கி யுரைத்தற்கு வேண்டப்படும் அத்துணை முயற்சி, அவற்றை மொழியிடைப்படுத்துரைக்கும்வழி வேண்டப்படாதென்பது ராமன் இராமன் என்னும் இரண்டனையுந் தெரிந்துரைத்துக் காண்க. இங்ஙனம் மொழியிடைப் படுத்தற்கண் முயற்சி சிறுகுதலின் அச்சிறுமுயற்சியாற் பிற்காலத்தே தோற்றமுற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/93&oldid=1585680" இலிருந்து மீள்விக்கப்பட்டது