திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை
213
தீயென் நின்நினைவருந் திருவடி (115) யாங்ஙனம் பெறுவெனோ (122) என்று அவனது அருள்நிலை பெறுதல் அரிதெனக் கூறியவாறு.
20. தோழி கிள்ளையைத் தூதுவேண்டல்
“மொழியுங் குழற முழுவுடம்பும் பைத்து
விழியுந் துயில்கூடா வெய்யோன் - பழியைத் திருவொற்றிச் சேயோற் குரையாய் கிளியே யுருவுன்னை யொப்ப துணர்ந்து.”
-
-
-
இ-ள்) மொழியும் குழற சொல்லும் தடுமாற, முழு உடம்பும் பைத்து முழுஉடம்பும் பசந்து, விழியும் துயில் கூட ா வெய்யோள் - தன்னை விரும்பிய என் அருமைத் தலைவியின் கண்களுந் தூக்கம் பொருந்தா; பழியை ஊரவர் அலருக்கு ஏதுவான அடக்குதற்கரிய இத்துயர நிலைகளை, திருவொற்றிச் சேயோற்கு உரையாய் - திருவொற்றி முருகற்கு எடுத்துச் சொல்வாயாக, கிளியே உரு உன்னை ஒப்பது உணர்ந்து அருமைக் கிளியே! தெளிவின்றிச் சொல்லாடலாலும் முழு வுடம்பும் பசந்து நிற்றலாலுங் கண்ணிமைகள் துயில் கூடாமையாலும் என் தலைவியின் உருவும் உன்னையே ஒத்து உனக்கு இனமாதல் உணர்ந்து என்பது;
'உணர்ந்து உரையாய்' எனக் கொள்க.
-
‘பைத்து’பசுமை என்பதனடியாகப் பிறந்த வினையெச்சம்; ‘பை’ என்பதே பச்சைநிறத்தை யுணர்த்தும் என்னும் பிங்கலந்தை. முருகப்பிரானை விரும்பி நின்றாளாகலின், தலைவி வெய்யோளெனப் பட்டாள்; வெம்மை, விருப்பம்; அன்றிக் காதல் வெப்பம் உடையாள் எனினும் பொருந்தும்; அங்ஙனமாயின் அச் சொல்லுக்கு 'வெப்ப'மெனப் பொருள் கூறிக்கொள்க.
னி
இனி இவ்விரண்டு பொருள்களுமே இங்குப் பொருந்து மாகலின் அதனை இரட்டுற மொழிந்து கொள்ளலுமாம்.
கிள்ளை தூதுபோதற்கு இயையுமெனக் காரணங் கற்பித்த திறம் இதன்கண் மிக அழகிதாதல் கண்டு மகிழ்தல்வேண்டும் (20)