95
திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை செய்வ தறியாக் கையரும் பலரே;
இவ்வா றொழிந்தனர் போகச் செவ்விய
மெய்ப்பொருள் உணர்துமென் றொப்புடன் புகுந்து கடவுட் டன்மையும் உயிரின் றன்மையும்
புடைபட வொற்றி வரம்பளந் துணராது மயங்கக் கொண்டு மக்களைத் தலைவரென் றொக்கக் கூறி யுழிதரு வோரும்,
100 அறிவாய் அருளாய்ச் செறியும் ஒருபொருள் சிறுமையும் மறுமையும் எய்தி வெறுவிதின் உயிரும் உலகமும் ஆகும் என்போருங், கட்புலன் ஆகுவ கருத்தின் றோற்றமாய் உட்புகுந் துணர்வோர்க்குப் பொய்ப்பொரு ளாகலிற்
105
கோயிலென்னே! மேவி யாங்குறையுந் தூய பேரொளிப் பிழம்பென லென்னே!
வஞ்ச மாந்தர்பிறர் நெஞ்சம் பிணிக்கக்
கல்லையும் மண்ணையும் வல்லிதிற் பொருத்திச் சூழ்ச்சியின் அமைத்த கீழ்த்திற மன்றோ
110 என்றுரை கூறுவோரும் ஆகப்
பொன்றிய மாக்கண் மணலினும் பலரே; ஆங்ஙனம் ஒழிந்த அளவின் மாந்தருள் யானும் ஒருவ னாக நோனாது
வேறு பிரித்தெடுத்துக் கூறுபடு மதியின்
115 மறைபுகழ் சைவம் நிறைவுற விரித்துத்
தெளிவார் அளவையின் விளக்கி மலைவுதரும்
மாறுபொரு தோட்டி வீறுறத் திகழுஞ் சோம சுந்தர குருவனொடு கூட்டி, இன்பம் என்ப தைம்பொறி யானுந்
31