உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

63

புராணத்துட் கடவுள் வாழ்த்தின் முதற்கண் ‘சங்கு’ என்னு மங்கலச் சொல்லும், தணிகைப் புராணத்துக் கடவுள் வாழ்த்து முதற்கண் ‘உலகு' என்னும் மங்கலமும் நியதி தப்பாது வந்தன. முதற்கட் பாடுதல்பற்றி காப்புச் செய்யுளின் கண்ணும் மங்கலங் கருது மாசிரியருமுளர். இம்மங்கலங் கூறல் நூன்முதற்கண் அல்லது பொதுப்பாயிர முதற்கண் அல்லது சிறப்புப் பாயிர முதற்கண் என விதந்து கூறாது பொதுப்பட முதற்கண் எனக் கூறலால், இலக்கணக் கொத்துடையாரும் வடநூல் முறை பற்றி நூலு முரையும் பாயிரமும் தானே செய்வான் புக்குச் சிறப்புப் பாயிரம் நூற்கு முன்னிற்கு முறைபற்றி மதிவெயில் விரிக்கும் என மங்கலங் கூறினார். பிரயோகவிவேக நூலார் நீர்கொண்ட சென்னியென மங்கலங் கூறினார்.

ஒவ்வோர் முறைபற்றி முதலென்பது பலதிறப்படலின் மங்கலங் கூறுமிடனும் பலவாயின. இனிச் சிவஞான யோகிகள் மங்கலங் கூறுங் கருத்தாற் சங்கேந்துமெனக் கூறினரல்லர்; இயல்பா னமைந்தது எனின், அது பொருந்தாது. உலகெலா மெனச் சிவதத்துவ விவேகத்திலும், சீர்கொளென முதுமொழி வெண்பாவினும், சீருங் கல்வியுமெனக் குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதியினும், திருமால் பிரம னெனக் கலைசைப் பதிற்றுப்பத்தந்தாதியினும், கார் கொண்ட வெனவும் மணிபூத்த வெனவும் ஈரிடத்து விநாயகர் பிள்ளைத் தமிழினும், மணிகொண்ட சீர்கொண்ட என ஈரிடத்து அம்பிகை பிள்ளைத்தமிழினும், திருத்தங்கு என முல்லை யந்தாதியினும் தவறாது மங்கலங் கூறலான். இனிச் கச்சியப்பர் திருவானக்காப் புராணத்து விநாயகர் வணக்கத்தை யகத்துறுப்பாகக் கொண்டு நிலம் போற்று மென மங்கலங் கூறிப் பின்னும் பலவிடத்துக் கூறினார். பேரூர்ப் புராணத்தும் அவ்வாறே பலவிடத்து மங்கலங் கூறினார்.

.

பட்டினத்தடிகளது நான்மணி மாலை, மும்மணிக் கோவை முதலிய பிரபந்தங்களினும் மங்கலந் தவறாது காணப்படுகின்றன. மெய்கண்ட சாத்திர முதலிய வீட்டு நூலின் கண்ணும் நித்திய மங்கள வடிவனாகிய பரம்பொருளது நாமங்களாகிய மங்கலச் சொற்கள் நியதிதப்பாது வந்தன. பாட்டுடைத் தலைவனுக்கே பயன்படற் பாலவாய கண முதலிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/96&oldid=1587203" இலிருந்து மீள்விக்கப்பட்டது