உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 21.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

❖ - 21❖ மறைமலையம் – 21

வனல்

பொருத்தங்கள் சில பொது நூலிடைக் காணப்பெறா. அது பற்றி அவை பாட்டியல் விதியின் வழீஇயின பொருந்தாது. இறையனார் அன்பென்பது மங்கல மெனக் கொண்டமை குறித்துப் புகழேந்தியார் நேசரென்பதும் மங்கல மெனக் கொண்டார். உய்த்து நோக்கின் மங்கல மின்றி வந்தநூ லொன்று மிலை யென்றே யெண்ணுகின்றேன்.

முதலிடை யிறுதி சிதைந்த நூலும், முன்பின் மாறிக் கிடக்கு நூலும் சில வுள. அவை யீண்டைக்குப் பிரமாண மாகா.

இனி நச்சினார்க்கினியர் கருத்து நோக்கின் மலைபடு கடாத்தில் ‘தீயினன்ன வொண்செங் காந்த' ளென்னு மிடத்து முதற்சீர்க் கயலும், தசாங்கத்தயலும் அமங்கல மாகா வென்னும் பாட்டியல் விதியை மாறாகக் கொண்டு தீயின் நன்ன வென இடர்ப்பட்டுப் பிரித்து இயற்பெயராகிய நன்னனை யடுத்துத் தீ யென்னும் மங்கலம் வந்தது என ஆளவந்த பிள்ளையார் குற்றங் கூறினார். அதனால் நச்சினார்க்கினியர் ‘தீ’ என்பது இன் சாரியையும், அன்ன வென்பதையும் அடுத்து நின்றதேயன்றி இயற்பெயரை யடுத்ததில்லை யென்றும், இப்பாட்டுப் படர்க்கையாய் நிற்றலின் நன்ன வென முன்னிலைப் பெயராக்கிக் குற்றங் கூறலு மமையா தெனவும், நியாயங் கூறி இப்பாட்டகத்து ஆனந்தக் குற்றமில்லை யென மறுத்தாரே யன்றி ஆனந்தக் குற்றமே யில்லை யென மறுக்கவில்லை. பாடினோர் தீயின் அன்னவெனக் கருதிப் பாடினும் தீயின் நன்னவென பிரித்துக் கோடற் கிடமாக அமைத லாகிய குற்ற மில்லாத இன்னோரன்னவற்றையும் ‘தொகையார் பொருள் லவாய்த்தோன்ற லென்னு L மானந்தக்

குற்றமாகப் பின்னுள்ளோர் சேர்த்தார். வ்வாறு அகத்தியனாருந் தொல்காப்பியனாருங் கூறாமையால் போலியாகச் சேர்த்த அவ்வானந்தக் குற்றத்தையே நச்சினார்க்கினியார் மறுத்தாரே யன்றி அகத்தியனார் தொல்காப்பிய னாராற் கொள்ளப்பட்ட ஏனை யானந்தக் குற்றங்களை மறுத்தா ரல்ல ரென்பது ‘சங்கத்தார் அங்ஙன நீக்காது கோத்தற்குக் காரணம் ஆனந்தக் குற்றம் இச்செய்யுளுட் கூறாமையா னென் றுணர்க' வனவும், ‘நன்னனென நகரமுதலும் னகர வொற்றீறுமாய் நிற்குஞ் சொல்லாயினன்றே அக்குற்ற முளதாவதென மறுக்க’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_21.pdf/97&oldid=1587204" இலிருந்து மீள்விக்கப்பட்டது