உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

224

  • மறைமலையம் - 22

சொல்லப்பட்டதே யன்றிச் ‘சேரமான் பெருமாள்’ என்றாவது, கழறிற்றறிவார்’ என்றாவது சொல்லப்படவில்லை. திருமகப் பாசுரத்துள் அவ்வாறு சொல்லப்படாவிடினும், அவ் வரலாற்றினைக் கூறும் திரு விளையாடல்2 ஏழாஞ் செய்யுளில் “நிலத்துயிர் கழறுஞ் சொற்கள், அனைத்தையும் அறிந்திரங்கும் அன்புடைச் சேரமான்காண்” என்று நம்பியாராற் சொல்லப் படுதல் என்னை? சுந்தரமூர்த்தி நாயனார் தோழரான சேரமான் பெருமாளுக்கே 'கழற்றறிவார்' என்னும் பெயர் உரித்தாதல் “கார்கொண்ட கொடைக் கழறிற் றறிவார்க்கும் அடியேன்” என்று சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையுள் அருளிச்செய்யுமாற்றாற் பெறப்படுகின்றதா லெனின்; பெரும்பற்றப் புலியூர் நம்பி தாங்கூறிய கடவுள் வாழ்த்தில் "மாலை, முடிகொள் சுந்தரர் தாள் போற்றி” என்று வணக்கங் கூறி யிருத்தலின், அவர் சுந்தரமூர்த்தி நாயனார்க்குப் பிற்பட்ட காலத்தே இருந்தாரென்பது நன்கு பெறப்படும். அங்ஙனம் பிற்பட்ட காலத்திருந்த அவர், பாணபத்திரர் காலத்தவரான சேர மானை எடுத்துக் கூறுகின்றுழி, அவ்வரசனும் சுந்தர மூர்த்தி தோழரான சேரமான் பெருமாளும் ஒருவரே போலும் எனச் சிறிது மயங்கியே, திருத்தொண்டத் தொகையுட் போந்த 'கழறிற்றறிவார்’ என்னும் பெயரை யெடுத்துக் “கழறுஞ் சொற்கள், அனைத்தையும் அறிந்திரங்கும்" என அங்ஙனம் வினைப்பத்து ஓதினார். அவ்வாறு ஓதினும், தமக்கு முன்னிருந்த நூல்களில் அவ்விரண்டு சேரமன்னரையும் ஒருவராக்குவதற்குப் போதிய சான்று காணாமையின் ஐயுற்றுத் திருத்தொண்டைத் தொகையிற் போலக் ‘கழறிற்றறிவார்' என்பதனை அம் மன்னர்க்குப் பெயராக உரையாது, கழறுஞ் சொற்கள் அனைத்தையும் அறிந்திரங்கும்" என அச்சொற்றொடரை வினைப்படுத்துச் 'சேரமான்' என்னும் பெயர்க்கு அடை மொழியாக்கினார். இவ்வாறு பெரும்பற்றப் புலியூர் நம்பியார் அச் சொற் றொடரைப் பெயராக வுரையாது. ஒரு பெயர்க்கு அடைமொழி யாக்கிக் கூறுதலானும், பாணபத்திரர் காலத்திருந்த சேரமான் சுந்தரமூாத்திகட்குத் தோழராய் அவரோடு கைலாயத்திற்கு உடன்சென்ற சேரமான் பெருமாளேயாயின் அச்சிறப்பினை அவர் கூறாதுவிடா ராகலானும் இவ் அடைமொழித் தொடரின்கண் வந்த இரண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/257&oldid=1587704" இலிருந்து மீள்விக்கப்பட்டது