உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

ஐம்புலப் பந்தனை வாளர விரிய

வெந்துயர்க் கோடை மாத்தலை காப்ப

நீடெழிற் றோன்றி வானொளி மிளிர

எந்தம் பிறவியிற் கோபம் மிகுத்து

முரசெறிந்து மாப்பெருங் கருணையின் முழங்கிப்

பூப்புரை யஞ்சலி காந்தள் காட்ட

எஞ்சா வின்னருள் நுண்டுளி கொள்ளச்

1

249

செஞ்சுடர் வெள்ளந் திசைதிசை தெவிட்ட வரையு றக் கேதக் குட்டங் கையற வோங்கி

இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை

நீர்நசை தரவரு நெடுங்கண் மான்கணந் தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும் அவப்பெருந் தாப நீங்கா தசைந்தன, ஆயிடை வானப் பேரியாற் றகவயிற் பாய்ந்தெழுந் தின்பப் பெருஞ்சுழி கொழித்துச் சுழித்தெம் பந்தமாக் கரைபொரு தலைத்திடித் தூழூழ் ஓங்கிய நங்கள்

இருவினை மாமரம் வேர்பறித் தெழுந் துருவ வருணீர் ஒட்டா அருவரைச் சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ்

வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகின்

மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின்

மீக்கொள மேன்மேன் மகிழ்தலின் நோக்கி

அருச்சனை வயலுள் அன்புவித் திட்டுத்

தொண்ட வுழவர் ஆரத் தந்த

அண்டத் தரும்பெறன் மேகன் வாழ்க!”

கார்கால நிகழ்ச்சியினைக் கூறும் இத் திருவாசகச் செய்யுட் பகுதியை, அங்ஙனமே கார்கால நிகழ்ச்சியைக் கூறும் முல்லைப் பாட்டின் பகுதியோடு ஒப்பிட்டு நோக்குக அப்பகுதி வருமாறு:

66

-

இடஞ்சிறத் துயரிய எழுநிலை மாடத்து முடங்கிறைச் சொரிதரு மாத்திர ளருவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/282&oldid=1587729" இலிருந்து மீள்விக்கப்பட்டது