உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 1

35

களாக ஆராய்ந்தெழுதி வெளியிடலானேம். இப் பெரு மான்றன் திருவடித் தூசின் மிகச் சிறு துகள் ஒன்றிற்கும் ஒவ்வாத சிற்றறிவினேமாகிய எம்மையும் இம் முயற்சியிற் புகுத்தி, இதனை நிறைவேற்றி வைத்த சிவபிரான் திருவடிப்போதுகளுக்கே இந்நூலை மாலையாக அணிந்து அவற்றை வழுத்துகின்றோம்.

இனி, இந் நூல் எழுதுதற்கட் கைக்கொள்ளப் பட்ட ஆராய்ச்சி முறைகள் சிலவற்றைப்பற்றிச் சில கூற வேண்டுவது இன்றியமையாததாகின்றது. மாணிக்கவாசகர் வரலாற்றுக் குறிப்புகளிற் பல, அவ்வரலாறு நுவலும் நூல்களில் உள்ள படியே யே இங்கு எடுத்து எழுதப்படவில்லை. ஏனென்றால், அக் குறிப்புகளிற் பல ஒரு புராணத்திற் காணப்பட்டபடியே, மற்றொரு புராணத்திற் காணப்படவில்லை; ஒன்றுக்கொன்று முரணாகவே காணப்படுகின்றன; அம் மாறுபாடுகளும் பிறவும் இந்நூலின்கண் ஆங்காங்கு ஆங்காங்கு எடுத்துக்காட்டி அவற்றுட் கொள்ளற்பாலன இவை, தள்ளற்பாலன இவை யென்பதை நன்கு விளக்கிக்காட்டி யிருக்கின்றோம். இவ்வாறு காட்டு மிடங்களிலெல்லாந் திருவாசகச் செந்தமிழ்ப் பாக்களிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சான்றுரைகள், அடிகளின் உண்மை வராற்றுக் குறிப்புகள் இவையென்று நாட்டுதற்கு உதவியாகக் காட்டப்பட்டிருக்கின்றன. இறைவனை வழுத்திப் பாடுஞ் செய்யுட்களில் அடிகள் தம் வரலாற்றுக் குறிப்புகளைத் தம்வய யின்றியே மொழிந்துவிடுமாறு நேர்வித்த சிவபிரான்றிரு வருட்கு எங்ஙனம் நன்றி பகரவல்லேம்! அடிகளின் வரலாற்றுக் குறிப்புகளைத் திருவாசகந் திருக்கோவையாரிற் காணப்படுங் குறிப்புகளுடன் வைத்து ஒத்து நோக்கி அவைதம்மை எழுதியிருந்தனராயின், புராணகாரர்கள் அங்ஙனந் தம்முள் மாறுகொண்டுரையார், புராண காரருரைகளில் மாறுகோள் கண்டவழியும், அவற்றுட் காணப் படாத குறிப்புகளை ஆராய்ந்துகண்டு எழுதுகின்றுழியுந், திருவாசகந் திருக்கோவையாரின் இடை மிளிரும் வரலாற்றுக் குறிப்புகளே அடிகளின் வரலாற்றுண்மையினைத் துணிதற்குக் கருவி களாயின. இவ்வாறாக ஓர் ஆசிரியரின் உண்மை நிலையைத் துணிதற்கு அவரியற்றிய நூல்களிலுள்ள சொற்பொருட் குறிப்புகளையே பெருந்துணையாய்க் கொள்ளும் ஆராய்ச்சி முறை இந் நூன்முழுதும் ஊடுருவி நிற்றல் கண்டுகொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/68&oldid=1587514" இலிருந்து மீள்விக்கப்பட்டது