உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

  • மறைமலையம் 22

நுவலும் பகுதிகளாலும், இன்னோரன்ன பிறவற்றாலுந் தமிழாசிரியர் தமிழ்நூல்களின் காலவரையறைகளும், அவ்வக் கால வியல்புகளும், அவற்றிடையே படும் மாணிக்கவாசகரது காலமும் மிகவும் விழிப்பாக ஆராய்ந்து தெளிவுபடுத்தப் பட்டிருக்கின்றன. இவ்வாறு செய்கின்றுழி, ஒவ்வொன்றுக்குஞ் சான்றுகள் காட்டப்பட்டிருப்பதோடு, சான்றாக எடுக்கப் பட்ட மேற்கோள் உள்ள நூற்பெயர்களும், அவற்றின்கண் அவை உள்ள இடங்களுஞ் சுட்டிச் சொல்லப்பட்டிருக் கின்றன. இவ்வாறு மேற்கோள்கள் உள்ள இடங்கள் கிளந்து குறிக்கப்பட்டிருத்தலால், இந் நூலைக் கற்பவர்கள்யாம் செய்துகாட்டும்ஆராய்ச்சி முடிபுகட்கு உள்ள சான்றுகளைத் தாமும் எளிதிற்கண்டு, எம்முடைய முடிபுகள் பொருந்துமா பொருந்தாவா எனத் தாமே வருத்தமின்றி ஆராய்ந்து தெளிதல் கூடும். பெரும்பாலும் தமிழில் உரை நூல்களும் ஆராய்ச்சி நூல்களும் எழுதும் அறிஞர்கள் தமது கோட்பாடுகட்குச் சான்றாகக் காட்டும் மேற்கோள்கள் உள்ள நூற்பெயர் களைக் கூட மொழியாதுபோவர்; ஏனென்றால், அங்ஙனங் குறித்துக் காட்டுதற்குப் பொறுமையும் பேருழைப்பும் நூல்களும் வேண்டும். யாம் எம்முடைய வருத்தத்தையுங் காலக் கழிவினையும் பொருட்செலவினையும் பாராது, உலகத்தில் உண்மை விளங்கி எல்லாரையும் உய்வித்தல் வேண்டும் என்பதொன்றனையே கடைப்பிடியாகக் கொண்டு, ஒவ் வொன்றுக்கும் மேற்கோள்களும் அவையுள்ள இடங்களுங் குறித்திருத்தலை அன்பர்கள் கருதிப்பார்த்து, இம் முறை யினைத் தாமுங் கையாண்டு உண்மையராய்ச்சியினை ஓம்புவாராக!

இங்ஙனம் ஆராய்ந்து செல்லும் நெறியிற் பிழையெனக் கண்டவைகளை மறையாது, அவை பிழைபடுதலைக் கிளந்து சொல்லியிருக்கின்றேம். எல்லாராலுந் தெய்வத்தன்மை யுடைய வராகக் கொள்ளப்பட்ட ஆசிரியர் நூல்களிலும் பிழையெனக் கண்ட வைகளை மறையாது வெளிப்படை யாக எடுத்துக் காட்டியிருக்கின்றேம். கடவுளல்லாத ஏனை மக்களெல்லாரும் எத்துணைதான் சிறந்தவராயிருப்பினும் பிழைபடாதிரார். இது, தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/71&oldid=1587517" இலிருந்து மீள்விக்கப்பட்டது