உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

313

யானும்

புராணத்தின்கண் யாண்டும் ஓதப்படாமை மாணிக்கவாசகர் காலத்துச் சிவாலயம் அங்கில்லை யென்பது தெளிபொருளேயா மென்க. அற்றேல், பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடலினும், வேம்பத்தூரார் திருவிளையாடலினும் அங்கே கோயிலுள்ளதாகச் சொல்லப்பட்டிருத்தல் என்னையெனின்; பின்னையோரான அவ்விருவரும் சரித்திர மாறுபாடாகத் தாமே சிருட்டித்துக் கொண்டு ஓதுவன பல உளவாகலின், அவர் கூறுவன ஈண்டைக்குப் பிரமாணமாகா வன்க. திருவாதவூரர் புராணம் ஒன்றுமே சுவாமிகள் சரித்திரத்தைப் பிழைபடாமல் உள்ளவாறே யுரைப்பதாம்; இம்மெய்ப் புராணவுரையோடு திறம்பிக்கூறும் அப் புராணவுரைகட்கு ஆதாரம் திருவாசகத்தும் பிறாண்டும் பெறப்படாமையின் அவை கொள்ளற்பாலனவல்லவென்று

மறுக்க.

.

இனி, மாணிக்கவாசகர் வருமிடம் நோக்கி அவரை ஆட்கொண்டருளல் வேண்டிக் குருநாதன் அப்பூங்காவிலே எழுந்தருளினான். மாணிக்கவாசகர் தாங் குதிரைகொள்ளப் போன அப் பெருந்துறையிலே அக் குருநாதனைக் கண்டு மெய்ஞ்ஞானப் பேறுடையராய் விளங்கினார். இங்ஙன மல்லது மாணிக்கவாசகர் பெருந்துறையிலே சிவாலய மிருப்பதாக உணர்ந்து அங்குச் சென்றாரல்லர். ஆகலின், இவர் அவ்விடஞ் சென்றதுகொண்டே அங்குச் சிவாலய மிருந்ததென நாட்டுவாருரையும் பொருந்தாதென்றுணர்க.

.

னி, மாணிக்கவாசகர் தாம் மெய்ஞ்ஞானப் பேறு பெற்று இறைவனுக்கு ஆட்பட்ட பெருந்துறையில் உடனே கோயில் கட்டுவித்தா ரென்றேனும், உபதேசம் பெற்றுப் பாண்டியனிடம்போய்ப் பின்னும் பெருந்துறை நண்ணி அவ்விடத்தைக் கடைசியாகவிட்டு மீண்ட பின்னர்த் திரும்பவும் அவ்விடத்திற்குச் சென்றாரென்றேனும் திருவாசகமாவது திருவாதவூரர் புராணமாவது கூறுகின்றில. மாணிக்கவாசகர் பின் தாம் பெருந்துறையை நினைவு கூர்ந்தபோதெல்லாம் அங்கே குருந்தமர நீழலிலே எழுந்தருளித் தம்மை யாட்கொண்ட குருநாதன் கோலத்தையே நினைந்துருகினதாகத்

தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/322&oldid=1590975" இலிருந்து மீள்விக்கப்பட்டது