உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

து

3

6

33

வன்

ஆயினானாம்; ஆகவே, எள்ளுநர்ப் பணித்தலும் இரந்தோர்க்கு ஈதலும் என்னும் இவையெல்லாம் பொருட் குறைபாடு உடையார்க்கு நிகழாமையின் இக் குறை பாடெல்லாம் க் உடையனாம்; அவையுடையானது பொருவிறப்பு என்னையோ வென்பது. இனிப் பரத்தையர்மாட்டுப் பிரியுமே யெனின், இ கண்டார்கண் தாழ்வானாம்; ஆகலான்; தலைமகள்மாட்டுக் கிடந்த அன்பிலன் ஆயினானாம்; அல்லதூஉங் கண்டுழி யெல்லாம் உள்ளத்தைச் செலீஇ உள்ளத்தின்வழி ஓடுமாகலான் நிறை இலனாயினானாம்; நிறையிலானது பொருவிறப்பு என்னையோவென்பது. இவையெல்லாஞ் சொல்லப் பெரிது மாறுகொண்டு காட்டிற் றெனின், மாறுகொள்ளாது; மாறு காள்ளாவாறு என்னையோ வெனின், ஓதற்குப் பிரியுமென்பது கற்பான் பிரியுமென்பதன்று; பண்டே குரவர்களாற் கற்பிக்கப்பட்டுக், கற்றான் அறம் பொருள் இன்பம் வீடு பேறுகளை நுதலிய நூல்களெல்லாம்; பரதேசங்களினும் அவை வல்லார் உளரேற் காண்பல் என்றும், வல்லார்கள் உள்வழிச் சென்று என் ஞானம் மேற்படுத்துஅவர் ஞானங் கீழ்ப்படுப்பல் என்றும் பிரியுமெனக் கொள்க. இனிக் காத்தற்குப் பிரியு மென்பது மன்பது நலிவார் உளராக நலிவுகாத்தற்குப் பிரியுமென்ப தன்று; நாட்டகத்து நின்றும் நகரகத்துந் தமக்கு உற்றது உரைக்கல்லாத மூத்தார்களும் பெண்டிர்களும் இருகை முடவருங் கூனருங் குருடரும் பிணியுடையாரும் என இத் தொடக்கத்தார் தம் முறைக் கருமங் கேட்டுத் திருத்துதற் பொருட்டாகவும், காட்டகத்து வாழும் உயிர்ச் சாதிகள் ஒன்றனை யொன்று நலிவன உளவாயின விடத்துத் தீதென்று அவற்றை முறைசெய்தற்குங் கொடிய வலைப்பட்டுக் கிடந்தனவற்றைத் துறைநீங்குதற் பொருட் டாகவும், வளன் இல்வழி வளந் தோற்றுவித்தற் பொருட்டாகவுந், தேவ குலமே சாலையே அம்பலமே என்று இத்தொடக்கத் தனவற்றை ஆராய்தற்கும், அழிகுடி யோம்பு தற்கும் பிரியு மென்பது; அல்லதூஉம், பிறந்த உயிர் தாயைக் கண்டு இன்புறுவது போலத் தன்னாற் காக்கப்படும் உயிர்வாழ் சாதிகள் தன்னைக் கண்டு இன்புறுதலின்,தான் அவர்கட்குத் தன் உருக்காட்டுதற்கும், மாற்றரசர் ஒற்று வந்தவிடத்து அவர் முன்னந் தனது ஊக்கங் காட்டுதற்பொருட்டாகவும் பிரியும்; அதனானே மாற்றரசருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/42&oldid=1590557" இலிருந்து மீள்விக்கப்பட்டது