உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மறைமலையம் 24

திறை கொடுப்பரென்பது. இனிப் பகைதணிவினை யென்பது, தூதுவர்போலச் சந்து செய்வித்தற்குப் பிரியுமென்பதன்று; இருவர் அரசர் நாளைப் பொருதும் இன்றுபொருதும் என்று முரண்கொண்டு இருந்த நிலைமைக்கண்,

இப்போ

தான்

அருளரசனாகலின் இம்மக்களும் இவ் விலங்குகளுமெல்லாம் இவ் விரண்டு குலத்திற்கும் ஏதம் நிகழும்; அதனால் ரொழிப்ப னென்று இருவரையும் இரந்து சந்துசெய்வித்தலுமொன்று; அல்லதூஉந், தேவரும் அசுரரும் பொருதகாலத்துத் தேவர்களையும் அசுரர்களையும் ஒருவீர் ஒருவீர் மிக்காரை ஒறுப்பல் யானெனப் பாண்டியன் மாகீர்த்தி சந்து செய்வித்ததுபோல் இருவரின் மிகைசெய்தீரை ஒறுப்பலென்று சந்து செய்வித்தலு மொன்று; இருவரையும் ஒறுக்குந் துணை ஆற்றலுடையனாகலானென்பது. அஃதே யெனின் தன்னகத்து இருந்துவிட அமையாதோ அன்ன ஆற்றலனாகலான், தான் செல்லவேண்டுமோவெனின், செல்லவேண்டும்; என்னை? காதலரைப் பிரிந்து ஒருகருமம் முடிப்பதெனின் மிக்க ஆள்வினை இல்லையாக லானென்பது. இனி, வேந்தற் குற்றுழியென்பது அவற்குச் சேவகனாய்ப் பிரியுமென்பதன்று, தனக்கு நட்டான் ஓரரசன் சென்றவிடத்து அவற்கு ஆய மறுதலையை வென்று நீக்குதற்குப் பிரியுமென்பது. ஆதலார் பிரிந்தே சந்து செய்விக்குமென்பது இனிப், பொருட்பிணியென்பது, பொருளிலனாய்ப் பிரியுமென்ப தன்று; தன் முதுகுரவராற் படைக்கப்பட்ட பல்வேறு வகைப்பட்ட பொருள்களெல்லாங் கிடந்ததுமன், அதுகொடு துய்ப்பது ஆண்மைத் தன்மை யன்றெனத் தனது தாளாற்றலால் படைத்த பொருள் காண் வழங்கி வாழ்தற்குப் பிரியுமென்பது; அல்லதூஉந் தேவர்காரியமும் பிதிரர்காரியமுந் தனது தாளாற்றலாற் படைத்த பொருளாற் செய்தன வல்லது பயன்படாது; என்னை, 'தாயப்பொருளாற் செய்தது தேவரும் பிதிரரும் இன்புறார்' ஆகலான்; அவர்களையும் இன்புறுத்துதற்குப் பிரியுமென்பது. இனிப் பரத்தை யென்பது பொதுப் பெண்டிர் மாட்டுப் பிரிவு; இவள்கண் இவள்கண் அன்பிலனாய்க் கண்டார் கட்டாழ்ந்து நிறைஇலனாய்ப் பிரிந்தான் அல்லன்; என்னை? தலைமகளின் நீக்கி ஆடல் காண்பல் பாடல் கேட்பல் எனப் பிரியும், பிரிய, அவற்றின்கட் சென்ற உணர்வு தலைமகண்மாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/43&oldid=1590562" இலிருந்து மீள்விக்கப்பட்டது