உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் முகவுரைகள்

மறைமலையடிகள்

139

செய்துவிடுகின்றனர். தமிழ் மக்களின் துன்பம் மிகுந்த இக் குறு வாழ்க்கையைக் கண்டு எமதுள்ளத்தில் உண்டான இரக்கமே இந் நூலையியற்றி வெளியிடுமாறு எம்மைத் தூண்டலாயிற்று. மக்கள் வாழ்க்கையைப் பற்றிய இந் நூலில், எந்தப் பகுதியையும் மறைத்தெழுதுதல் ஆகாமையாலும். அன்றி அங்ஙனம் மறைத் தெழுதினால், இன்றியமையாது தெரிந்து ஒழுக வேண்டிய முறைகள் விடப்பட்டு. அதனால் ஆண் பெண் பாலாரை இ ஃது அறியாமையினின் றெடுக்கமாட்டாதாய்ப் பயனின்றிக் கழியுமாதலாலும் ‘ஆண்பெண் சேர்க்கை’,‘மக்கட்பேறு’ ‘கரு விலக்கு’முதலான பகுதிகளிற் சொல்ல வேண்டுவன வெல்லாம் ஒரு சிறிதும் மறையாமல் திறப்பாகவே வரைந் திருக்கின்றேம். மக்கள் வாழ்க்கையின் உயிர்நிலையாயுள்ள இச் சிறந்த பொருள் களைத் தெளிந்து விளக்காது விடுதலால் வழி வழிப் பெருகும் பெருந்தீங்கினை நன்குணர்ந்தே. திருமூலர் முதலான நம் பண்டையாசிரியர்களும் இவை தம்மைத் தம் நூலில் மறையா தெடுத்து விளக்கி அறிவுறுத் திருக்கின்றனர். இஞ்ஞான்றை ஆங்கில அமெரிக்க ஆசிரியர் களிற் புகழ் மிகப்படைத்த ஆடவரும் மகளிருங்கூட இத்துறைகளில் மறைவு சிறிது மின்றியே திறந்தெழுதி வருமாற்றை, இதற்குப் பின்னுள்ள எமது ஆங்கில முகவுரை யுள்ளும் எடுத்துப் பேசியிருக்கின்றேம். ஆதலால் வாழ்க்கை யின் மறைபொருள் நுட்பங்கள் முற்றும், நோய் நீக்கும் இயற்கை முறைகள் முற்றும் நன்கெடுத்து விளக்கும் இந்நூல் ஆண்பெண்பாலார் இருதிறத்தினர்க்கும் பெரிது பயன் பட்டு அவரை நீடினிது வாழ்விக்கும் என்னும் நம்பிக்கை மிகுதியும் உடையேம்.

இந்நூலின் முதற்பகுதியில் விரவியிருக்குஞ் சிற்சில வடசொற்களையும் இதன் இரண்டாம் பதிப்பின்கட் களைந்து விடுதற்கு திருவருள் விரைவிற் கூட்டுவதாக.

திருவள்ளுவர் ஆண்டு,1963

மாசித்திங்கள், 3 ஆம் நாள்

மறைமலையடிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/172&oldid=1590219" இலிருந்து மீள்விக்கப்பட்டது