உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

  • தமிழ் முகவுரைகள் மறைமலையடிகள்

171

விளையும் நன்மை தீமைகளைப் பற்றியும், அவர் இயங்கும் இடத்தின் இயல்பு காலத்தின் இயல்புகளைப் பற்றியும், இன்னும் இவைபோன்ற வேறு சிலபலவற்றைப் பற்றியுந்தான் கூறக் கருதியவைகளைக்

பெறுவன்.

கூறவும் இடம் இவ்வேற்றுமையே யன்றிக், கதைகள் சிறியவும் பெரியவுமாய்ச் சுருங்கியும் விரிந்தும் நடைபெறல்போலாது, நாடகங்கள் மிகவிரிந்து செல்வதின்றிச் சுருங்கிநடக்கும் மற்றுமொரு வேறுபாடும் உடையதென்பதும் நினைவிற் பதிக்கற்பாற்று.

என்றிதுகாறுங் காட்டிய கதைநூல் இலக்கணங்கள் இனிதொருங்கமையக் கோகிலாம்பாள் கடிதங்கள் என்னும் இந்நூல் இயற்றப்பட்டிருக்கின்றது. இதன்கண் வருந் தலைமகள் கோகிலாம்பாள் தன் காதற்கணவற்கெழுதிய கடிதங்களின் வாயிலாகவே இந்நூற்கதை புலனாகிச் செல்லுதலால், அத்தலை மகளே இந்நூலை இயற்றிய ஆசிரியன் நிலையில் நிற்கின்றாள். ஆதலால், இந்நூலாசிரியன் தன் கருத்தாகக் கூறக் கருதியன வெல்லாம் அவன் வரையுங் கடிதங்கள் வாயிலாகவே புலப்படுக்க வேண்டியவனாவான் என்றுணர்ந்து கொள்க.

கோகிலாம்பாள் நாட்செல்லச் செல்லத் தமிழ்மொழிப் பயிற்சியில் மிக்கவளாய்ச் செல்லுதலின், துவக்கத்தில் அவள் எழுதுங் கடிதங்களில் அவள் இனத்தவரான பார்ப்பனர் வழங்கும் வடச்சொற்கள் டையிடையே கலந்திருந்தல் போலப், பின்னர் அவள் எழுதுவனவற்றில் அவை அத்துணை கலவாமல், தனித்தமிழ்ச் சுவை மிகுந்து வருதல் கண்டுகொள்க. கோகிலத்தின் மாமனார் தமிழ்ப்பயிற்சியுடையரேனும், அவர் தமிழ்நடை யெழுதிப் பழகியவரென்பது புலப்படாமையின், அவர் பேசுவனவற்றில் வடசொற்கள் காணப்படும். அவர்க்கு னமான ஏனையோரில், அவள் தமையனைத் தவிர மற்றையோ ரெல்லாந் தமிழ்ப்பயிற்சி சிறிதும் இல்லாத வராகலின், அவர் இயற்கையாய்ப் பேசுகின்ற படியே அவருடைய உரையாட்டுகள் எழுதப்பட்டிருக் கின்றன. என்றாலும், இயற்கையில் அவர்கள் மிகவுஞ் சிதைத்துப் பேசுந் தமிழ்ச் சொற்கள் நூலுள் அங்ஙனமேவருதல் அருவருப்புக்கு இடமாய் நூன்மாட்சிக்கு வழுவாமாகலின், அவை பெரும்பாலுந் திருத்தியே எழுதப்பட்டிருக்கின்றன. இங்ஙனஞ் சொற்களையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/204&oldid=1590251" இலிருந்து மீள்விக்கப்பட்டது