உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

தமிழ் முகவுரைகள் மறைமலையடிகள்

L

195

என்று அருளிச்செய்தவாற்றால் தெற்றென விளங்கா நிற்கின்றது. திருஞானசம்பந்தப்பெருமானுக்குப் புலனாய்த் தோன்றிய இறைவனுருவம் வேறெவர்க்கும் புலனாயிற்றில்லை. அப்பர்க்குத் தோன்றியதும் அப்பெற்றியதே, சுந்தரர்க்குப் பார்ப்பன முதியோனாய்த் திருமணப் பந்தலிற் றோன்றிய வடிவம் பல்லரருங் காண வந்ததொன்றே யாயினும், அது திருவெண்ணெய் நல்லூர்க்கு அவரை ஈர்த்துச் சென்று மறைந்தக்கால், அதனைக் கண்டு தெய்வமெனத் தெளிந்தவர் சுந்தரரைத் தவிர மற்றையோர் அல்லர். மற்று, மாணிக்கவாசகர் பொருட்டுக் குருவடிவிற் போந்து மறைந்த முதல்வனையோ எல்லாருங் கண்டனர்; கொற்றாளாய் வந்து பாண்டியன் கைப் பிரம்பால் அடியுண்டு மறைந்த கோலத்தினையும் அங் ஙனமே ஆண்டிருந்தாரெல்லாருங் கண்டு மெய்ம்மறந்த நிலையினரானார். அதனால், எல்லாம்வல்ல சிவபிரான் மாணிக்கவாசகர் பொருட்டு எல்லார்க்கும் எதிரே எளிய னாய்த் தோன்றி மறைந்தாற்போல், வேறொவர் பொருட்டும் எங்கேனுஞ் செய்ததுண்டோ வெனின், அதற்குச் சான்றின்மையின், அவ்வாறு செய்ததில்லையென்பதே தேற்றமாமென்று முடிக்க.

L

இவ்வாறு, எல்லாம்வல்ல முழுமுதற்கடவுளை நேரே கண்டு அவற்கு அடிமையாகி அவன்மேற் குழைந்து குழைந்து அழுதழுது பாடிய மாணிக்கவாசகரின் திருவாசகத்தை ஓதியுருகாதார் நெஞ்சம் வேறெதனாலும் உருகா தென்பதுபற்றி யன்றோ,

“திருவாசகத்தின் உருகார் மற்றொருவாசகத்தும் உருகார்”

என்னும் பழமொழியும் யாண்டும் வழங்கிவருகின்றது. நெஞ்சக்கசிவு, நெஞ்சக்குழைவு இல்லாதவர்கட்கு அருளும் அன்பும் இரக்கமும் உண்டாகா; அவையில்லாதவர்கள் தம்மோடொத்த மக்களிடத்தும் ஏனைச் சிற்றுயிர்களிடத்தும் அருளும் அன்பும் இரக்கமும் உடையராகார்; இச்சிரந்த மென்குணங்கள் ல்லாதவர்கள் இம்மையிலும் இனிய வாழ்க்கையினை எய்தாராய் பெரிதுந் துன்புற்று மடிவதோடு, மறுமையிலும்

றைவனருளைப் பெறாராய் இழிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/228&oldid=1590275" இலிருந்து மீள்விக்கப்பட்டது