உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 26.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

மறைமலையம் - 26

பிறவிகளிற் சென்று புகுந்து துன்புறாநிற்பர். தமக்கு இப்பிறவியைத் தந்த தலைவன்பால் நன்றிமிக்கு, அவனை உருகி வழுத்தாதவர்க்கு இம்மை மறுமையிரண்டிலும் இன்ப மில்லையாதலாலும், தமக்குப் பேருதவி சய்த தலைவனை வணங்கி வழுத்துதல்விட்டுத் தம் தலைவ னல்லாத மக்களையும் ஏனைச் சிற்றயிர்களையுந் தம் தலைவனாகப் பிழைபடக்கொண்டு வழிபடுவார்க்கும் அங்ஙனமே இம்மை மறுமைப் பயன்கள் வாயாவாத லாலும், தந்தலைவன் இன்னவன்றான் என்றுணராருந் தமக்குத் தலைவனேயில்லையென்று மறுப்பாருமான போலியாசிரியர் களைப் பின்பற்றி நிற்பார்க்கும் அங்ஙனமே இம்மை மறுமைப் பேறுகள் வாயாவாதல் திண்ணமாமாதலாலும், உலகுயிர்கட்கெல்லாம் ஒரே தலைவனாய்த் தாயுமிலி தந்தையிலியாத் தனிநிற்குஞ் சிவ பிரானை நேரேகண்டு அவன்பால் என்பெலாம் நெக்குநெக்குருகப் பாடிய மாணிக்கவாசகர் தந் திருவாசகம் ஒன்றே நமக்கு இம்மை

மறுமைப் பேறுகளெல்லாம் ஒருங்கே யுதவுமென்

கடைப்பிடித்தல் வேண்டும்.

மன்று

இத்

இத்துணைச் சிறந்த தெய்வத் திருவாசகத்தையும் அதனை அருளிச்செய்த மாணிக்கவாசகப் பெருமானையும் தென்றமிழ் நாட்டிலுள்ள நன்மக்கள் முறையே ஒப்புயர் வில்லாத் தமிழ்மறையாகவும் சமயாசிரியராகவும் வைத்து வழிபட்டுவருதல், அவர்தம் மெய்யறிவின் மாட்சியையே விளக்கிக் காட்டுகின்றது. ஏனை எந்த நாட்டவர்க்கும் வாயாத இவ் வரும்பெரும்பேறு தமக்கு வாய்த்திருத்தலை நன்குணர்ந்த தமிழ்மக்கள், திருப்பெருந்துறையில் உள்ள திருக்கோயிலிர் மாணிக்க வாசகரையே சிவபிரானாக வைத்து வழிபாடு செய்து வருவது பெரிதும் போற்றற்பாலதொன்றாம். வெறு நாடகக்காப்பியம் இயற்றிய செகப்பிரியர் என்னும் ஆங்கில நல்லிசைப்புலவர் உயிர்வாழ்ந்த இல்லத்தையும் கோயிலாக்கி, இவ் வுலகமெங்கணுமுள்ள ஆங்கில அறிஞர்கள் மெய்யன்புடன் அங்கே சென்று அங்கு அமைந்திருக்கும் அவர்தம் உருவத்தை வணங்கிச் செல்கின்றார்களென்றால், எவராலுங் காணமுடியாத கடவுளைக் கண்டு அவர்க்குந்

ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_26.pdf/229&oldid=1590276" இலிருந்து மீள்விக்கப்பட்டது