உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

மறைமலையம் - 27

அதுபோல் உருவுடைய கடவுளும் அழியுமென்பது பெறப் படுமே எனின்; அங்ஙனமன்று. அறிவில்லாப் பொருள் களிலுள்ள உருவம் மட்டும் அழிவு பெறுமே யல்லாமல், அறிவின்கண் உள்ள உருவம் ஒரு ஞான்றும் அழிவுறாது. சிற்பவித்தையிற் றேர்ந்த ஓர் அறிஞன் சலைவைக் கல்லிற் செதுக்கித் திரட்டிய ஓர் உருவம் அழிந்து போமாயினும், அதற்கு முதலாய் அவன் அறிவில் நின்ற உருவம் ஒரு ஞான்றும் அழிவதில்லை, அவன் தன் அறிவின்கண் அமைந்த அவ்வுருவத்திற்கு இசையச் சலவைக் கல்லின்கண் அது போன்ற எத்தனையோ வடிவங்களை

.

அழகிய

அமைக்க மாட்டுவான். இங்ஙனம் வல்லவனான அவ்வறிஞனின் அறி வுருவம் ஒரு ஞான்றும் அழியாமையை நன்குணர்ந்தவர்கள் கடவுளின் அருளுவம் அழியுமென்று கூற ஒருப்படுவார் களோ? ஆதலாற் கடவுளின் அருளுருவம் ஒரு ஞான்றும் அழியாத தொன்றாகலின் உருவங்களெல்லாம் அழியுமெனப் பொதுப்படக் கூறுதல் ஒருசிறிதும் பொருந்தாத தொன்றாம்.

இனி உருவுடைய அறிவில்லாப் பொருள்கள் அழிந்து போதல் உருவத்தினால் வந்த குற்றமன்று, அவை பருப்பொருள்களாய் இருத்தலினால் அழிகின்றன என்றும், அவையும் நுணுகிய நிலையை அடைந்த வழி அறியாமல் இருக்குமென்றும் கடைப்பிடித்தல் வேண்டும் அறிவின்கட் காணப்படும் உருவம் என்றும் அழியாமல் ஒரே தன்மையாய் நிற்க, அறிவில் பொருளின்கண் உள்ள உருவமே அழியும் வகையை உற்றுணர வல்லார்க்கு அஃது அவ்வப் பொருளின் தன்மையால் நேர்ந்ததன்றி உருவத்தினால் நேர்ந்ததன் றென்பது தெள்ளிதிற் புலனாம். அறிவு மிக நுணுகிய யல்பினதாகலின் அதன்கண் உருவம் என்றும் அழியாத இயல்பிற்றாயும், அறிவில் பொருள் பருப்பொருளாதலின் அதன்கண் உருவம் அழியும் இயல்பிற்றாயும் நிற்றல் நுண்ணுணர்வினாரெல் லார்க்கும் விளங்கற் பாலதேயாம்.

இனி, உலகத்திலுள்ள அறிவிலாப் பொருள்களும், அறிவுடைய உயிர்ப் பொருள்களும் உருவங்களைப் பெற்றது தத்தம் முயற்சியினால் அன்று. என்னையெனின், அறிவில்லாப் பொருள்கள் தாமாகவே ஒர் உருவத்தை அமைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/107&oldid=1591077" இலிருந்து மீள்விக்கப்பட்டது