உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

115

இங்ஙனம் கந்தழி, பிரமம் என்னும் சொற்களால் எடுத்தோதப்பட்ட சிவம் என்னும் எப்பொருளுங் கடந்த பெரும்பொருளை ஆராய்ந்த நேரமே சைவ சமயம் என்று உணரற்பாற்று, அற்றேல் அப்பெரும் பொருளை யாதானு மொரு பெயரால் வழங்கியிடாமற் சிவம் என்னுஞ் சிறப்புப் பெயரால் வழங்குவித்தல் என்னை யெனின்; வேதாகம நிடத ஷடதரிசன புராணேதிகாசமாகிய எல்லாம் சிவ என்னும் இரண்டழுெத்திலே அடங்குகின்றன, யாங்ஙன மெனின், இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்னும் வேதம் நான்கில் அதர்வணம் என்பது முதன் மூன்றின் மந்திரத் தாகுப்பேயாதலால் அஃதவற்றில் அடங்கப் பெறும், ஆகலினாற்றான் அமரநிகண்டுடையார் அம்மூன்ற னையுஞ் சுட்டி வேதங்கள் ‘த்ரயீ’ என வழங்கப்படு மென்றனர்,

அம் மூன்று வேதங்களுள் நடுநின்ற எசுர் தஸ்ய யஜூரேவசிர சிர” என்றமையால்,

னையிரண்டிற்கும்

முகம்போல நிற்குஞ் சிறப்பு வாய்ந்ததாம். இது மந்திர மெனவும் பிராமணம் எனவும்இருவேறு பகுதியினதாய் விளங்கா நிற்கின்றது.

களாக

ச்

இவற்றுள் மந்திரப் பகுதி மறித்தும் ஏழு காண்டங் களாகப் பகுக்கப்பட்டுச் சம்மிதாகாண்டம் என்னும் பெயருடைத்தாய்ச் சிறந்து விளங்குவதாம், இனி னி சம்மிதாகாண்டம் ஏழினுள்ளும் நடுக்காண்டமே பெரிதுஞ் சிறப்புடைத்து, இனி இந்நடுக்காண்டமும் ஏழு சங்கிதை க்கப்பட்டுள்ளது, இவற்றுள்ளும் நடுநின்ற சங்கிதையுள் திருவுருத்திரத்தின் கண்ணே சதருத்ரியம் விளங்கா நிற்ப, அச் சதருத்ரீயத்தின் இடையிலே விளங்கும் 'நமசிவாய' என்னும் ஐந்தெழுத்துக்களின் நடுவில் ஒளிர்ந்து காண்டிருக்கும் 'சிவ' என்னும் மொழியால் வேதமும் வேதத்தைச் சார்ந்த கலைகளும் ஒளிர்ந்து கொண்டிருக் கின்றன, ஆகையால், இச் சிவவென்னும் மொழி பிரம மென்னும் மொழியாற் குறிக்கப்படும் பெரும்பொருட்குச் சிறப்புப் பெயராம் என்பது தெளியப்படும், இன்னும் இதனை விரிப்பிற் பெருகுமாதலால் இத்துணையின் அமைந்து, எடுத்த பொருண்மேற் றொடர்ந்து செல்வாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/140&oldid=1591110" இலிருந்து மீள்விக்கப்பட்டது