உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

மறைமலையம் - 27 –

யருண்மொழிகளையும் அந்த அருண் மொழிகளாற் பெறப்பட்ட உண்மை யருட்கோல வியல்பு களையும் உண்மை வரலாறுகளிற் பழகிய எவர்தாம் தழுவாது ஒழிவர்? அல்லதூஉம். உலக வியற்கைக்கு மாறாக நடப்பன வொன்று மில்லாமையால், 5அற்புதங்கள் அல்லது புதுமைகள் நிகழ்ந்தனவென்று உரைத்தல் வெறும் பொய் யேயா மென்று வாய்ப்பறை யறைந்து திரியும் பிரமசமா சத்தார் இவற்றிற் கெல்லாம் யாது சொல்லவல்லார்?

னி

7

இனி இங்ஙனந் தோன்றும்இறைவன் அரு அருட்கோல வியல்பு உணரமாட்டாது, அவை தம்மை “எண்ண முதிர்ச்சியா னிகழ்ந்த உருவெளித் தோற்றங்களா மென்பார் தெளிந் துறுதிகூடுமாறு இன்னும் ஒன்று காட்டுவாம். மக்களென்பார் எக்காலத்தும் எவ்விடத்தும் ஒருவரோ டொருவர் உறவு உரிமை பூண்டு வாழும் இயல்பினரேயாம். இவ்வாறு உறவுரிமை கொண்டு வாழுமியல் பினராகிய மக்கள் ஒருவரொருவரோடு அளவளாவி வாழும் முறை யினால் அறிவு முதிர்ச்சியடைந்து உலகிய லறிவும் கடவுளு ணர்ச்சியு முடையராகின்றனர். அவ்வாறன்றி ஒவ்வொரு வரும் பிறவி முதற் கொண்டு அளவளாவுத லின்றித்தாந்தாம் லின்றித்தாந்தாம் தனித்திருந்து வளர்ந்து வருவராயின் அவரெல்லாம் அறிவு சிறிதுமிலராய் விலங்கினங்களைப் போல் உழன்று திரிவர். இதற்கு எமது குழந்தைப் பருவமே சிறந்த எடுத்துக் காட்டாம். யாம், தாய்வயிற்றையகன்று வெளிப்பட்ட காலத்தில் எம்மறிவு ஒரு சிறிதும் விளங்காது கிடந்தேம். அங்ஙனங் கிடந்த காலத்தில் எம்முடைய உள்ள மானது. உலக வுருவவண்ணங்கள் எதிர் தோன்றாத மாசற்ற பளிங்குபோலவும் இலச்சினையிடப்படாத மெழுக் குருண்டைபோலவும் இருந்தது.

மனமென்னுங் கண்ணாடியில் கண்ணாடியில் அவை விளங்காது ஒழியவே, அக்கண்ணாடியின் அப்பக்கத்தேயிருந்து அவற்றைக் காணும் உயிரும் அறிவு விளங்கப்பெறாது கிடந்தது. அப்போது இறைவன் எமதுடம்பைப் பல்வகை யுண்டிகளால் வளர்த்து அதன்வழியே கொண்டுபோய் எமக்கு அறிவு விளங்கச் செய்யும் பொருட்டுத்தான் இரக்கத்தான் எம்மகத்தே வைத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/163&oldid=1591133" இலிருந்து மீள்விக்கப்பட்டது