உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

146

மறைமலையம் - 27

காழும்பாலுணவை; போதை என்பதில் ஐ காரம் "குறவரையார்க்குங்' குளிர்மலை நாட” என்னும் திருச்சிற்றம் பலக் கோவையாரிற் போல வந்த சாரியை; “ஆர்” என்பது "செப்புற்ற கொங்கை” “தோளுற்றொர் தெய்வம்” என்னுந் திருக்கோவையார் சிந்தாமணியிற் போல உவமவுருபின் பொருள்பட வந்த உவமச்சொல், மாற்றுயர்ந்த பொன் செவ்வென்று பொலிதலானும் வள்ளம்வாயகன்று வட்டமா யிருத்தலானும் உவமை வண்ணமும் வடிவும் விராய் வந்தது. இவ்வாறே “பாண்டிலெடுத்த பஃறாமரை கீழும்பழனங்களே என்று திருக்கோவையாரினும்

போந்தது காண்க;

நச்சினார்க்கினியரும் “பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டா அங்கு" என்புழி வண்ணமும் வடிவும் விராய்வந்த வுவமை யன்றுரை யுரைத்திட்டார்; தாதையார் பொல்லாதென முனிவு உற -சிவபாதவிருதயரென்னுந் தந்தையார் இழிந்தாள் ஒருத்தி தந்த எச்சிலாதலின் அது நுகர்தல் தீதாமென் றுரைத்து வெகுள; தான் என்னை ஆண்டவன் தான் தன் அருட்பெருக்கான் விரும்பி வந்து என்னை ஆண்டு கொண்டவன்;

-

-

அங்ஙனம் ஆண்டுகொண்ட இறைவன் திருவடை யாளங்கள் யாவையோவெனின்; காதையார் குழையினன் காதிற்செறிய இடப்பட்ட வெண்டோடு உடையனாம்; அதுவன்றியும், பேதையாளவளொடும் - தான் அறிவுருவின ளாயிருந்தே உலகத்துப் பெண்டிர்க்கெல்லாம் அறியாமை கற்பித்தல் வேண்டுதலின் தானும் அறியாமை யுடையார் போற் றோன்றும் உமையம்மையுடன் பிரிவறக கலந்து; 'அறியாமை' என்பது பெண்மைத்தன்மை நான்கனுள் ஒன்றாம். அது தானொரு பொருட்டன்மை யறிந்தும் அறியாதது போன்று ஒழுகுதல், ஆசிரியர் நக்கீரனாரும் “மடமென்பது கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை” என்று உரை கூறினார்; பெருந்தகை - சிற்றறிவுஞ் சிறு தொழிலு முடைய ராகிய உயிர்கள் போலாது அவற்றை யெல்லாந் தன்னகப் படுத்து வரையறையின்றி விரிந்து செல்லும்விரிந்த வுணர்ச்சியும் முழுமுதலாற்றலும் உடைய னாகிய ஏது வினாலே பெருந்தகையாய் விளங்கும் முழுமுதல் வனான சிவபெருமான்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/171&oldid=1591141" இலிருந்து மீள்விக்கப்பட்டது