உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

-27

மறைமலையம் – 27

கருப்பையிற் கிடந்துழலும் பெருந்துன்பமே போதரலானும், தாய்தந்தை முதலாயினார்க்கும் அதனாற் பேரிடரே விளையுமாதலானும், மணங்கூடும் மங்கைப் பருவங்காறும் வளர்த்தக்காற்பட்ட மேலைத்துன்பங்களெல்லாங் கிளைத்து முன்னைமுயற்சிகள் எல்லாம் பயனின்றிப் போதலானும், பேரிரக்கமுடையனாகிய பெருமான் இத்தனை துன்பங் கட்கும் தன்அன்பரை யுள்ளாக்குதல் அவனுக்கு இரக்கம் இன்றாமென்பதுபட்டு இழுக்காய் முடிதலானும் அவ்வாறு வினாதல் பெரிதும் ஏதமாமென்று மறுக்க.

அற்றேலஃதாக, எழுவகைப் பொருள்களையுங் கொண்டு அங்ஙனம் அவள் உடம்பு படைத்திடுதலே முறையாமன்றி, அவற்றுள் ஒன்றாகிய என்பைக் கொண்டு அவள் உடம்பைத் திரட்டி எழுவித்தானென்றல் அமையா தாமெனின்; அறியாது கடாயினாய், ‘அண்டங்களெல்லாம் அணுவாக அணுக்க ளெல்லாம் அண்டங்களாக ஒரு நொடியில் மாற்றவல்ல னாகிய இறைவன் மாட்டும் அங்ஙனஞ் செய்கைத்திறங் குறைபாடுண்டாக வினாதல் அறியாமை முதிர்ச்சியாவதன்றிப் பிறிதில்லையென விடுக்க. அல்லதூஉம் என்பை யொழித்து ஒழிந்த பொருள்களெல்லாம் நெகிழ்ச்சி யும் மென்மையுமுடையன வாகையால் அவையெல்லாம் நுண்வடிவாய் நின்றன அவற்றைப் பருப்பொருளாகத் திரித்து என்போடு ஒருங்குகூட்டி உடம்பைப் படைத்திட்டானாகலின் ண்டும் மாறுபாடில்லை யென்றொழிக. இதுநிற்க.

இனி, ஞானசம்பந்தப்பிள்ளையார் மூன்றாம் ஆண்டி லேயே பேரறிவினராய் விளங்கினாரெனல் யாங்ஙனம்? அஃது உலக வியற்கை யன்றாலோவெனின்; அறியாது கடாயினாய் போப் முதலான முன்னை ஆங்கிலப் புலவர் களுங் குழவிப் பருவத்திலேயே புலமை மிகவுடை யராய் விளங்கினா ரென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையின் உலகவியற்கை. உலகவியற்கையென நீர் கூறுவன வெல்லாங் குன்றக் கூறல் என்னும் குற்றமுடையதா யொதுங்குமாறு அறியக் கடவீராக. உலகவியற்கைக்கு நீர்வரைந்து சொல்லும் இலக்கணம் பெரும்பான்மை யாய் நிகழ்வதென்றுரைப்பீ ராயின் அப்போது அக்குற்றம்வர மாட்டாது; யாங்கூறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/183&oldid=1591153" இலிருந்து மீள்விக்கப்பட்டது