உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

173

திரிந்த மனத்தின்கண் முதல்வன் விளங்கிய வழித் தருக் கறுந்து அசைவின்றி யின்பநுகர்ந்து கிடக்கும் மெய்யடி யார்க்கு அவன்றன் திருக்கோலம் புலனாதல் ஒருதலையேயா மென்றுணர்க. எனவே, உரையுணர்வு கடந்த சிவம் நெக்கு நெக்குக் குழைந்துருகு மெய்யன்பர் திருவுள்ளத்தின்கட் புலனாமாறு பற்றி வரக்கடவதோர் இழுக்கில்லை யென்பதூஉம், இழுக்கின்றாகவே உருவத் திருமேனியிற்

காண்

ழிபாடியற்றும் அன்பர்க்கு மன மனவொருமை யுண்டாய் இரண்டற்ற வீடுபேறு வாய்க்கு மென்பதூஉம் பெறக்கிடந்த வாறுணர்க. இது கிடக்க.

இனி உலகமியாங்கணும் பரந்துபட்டுக் கிடக்கும் மக்கட் பரப்பில் நாகரிகவுணர்ச்சி மிகப் பெற்றுடையார் முதல் அஃதில்லாமையின் விலங்கினத்தோ டொப்பவைத் தெண்ணப்படும் மாக்களீறாக யார்க்கும் இறைவனுளன் என்னும் உணர்ச்சியும், அவ்வுணர்ச்சியோடு உலகத்தின்கட் காணப்படும் பொருள்கள் வாயிலாக அவனை வழிபடுதல் வேண்டும் என்னும் மனவொருமையும், திருவுருவ வழி பாட்டின் இன்றியமையாமைக் கடப்பாடும் இயற்கையி லேயே அமைந்து கிடக்கு முண்மை அவ்வத்தேயமாக்கள் வரலாறுகளை ஒரு சிறிது உற்று நோக்குவார்க்கும் நன்கு விளங்கும்.

நாகரிக வுணர்ச்சி யுடையராகாத மாக்களெல்லாம் தமக்குந் தம்மைச் சார்ந்தார்க்கும் அச்சம், துன்பம், நலம் முதலியன நிகழ்தற்கேதுவாகப் புறத்தே தோன்றும் உலகியற் பொருள்களை யெல்லாங் கடவுளாகக் கொண்டு வழிபாடு இயற்றி வருகின்றார். ஆகவே, தமக்கு உறுதுயர் நீக்கி நலம் பயப்பதாக அவர் தாங்கருதிய புறப்பொருளையே இறை வனாக வைத்து வணங்கக் காண்டலாலே, அவர்தங் கருத்து வகையால் அவையும் இறைவன் வழிபாடாய் முடிந்திடுதற்கு ஓரிழுக்கில்லை. நாம் முதல்வரல்லோம் நம்மினும் வல்லதான பிறிதொரு பொருளையே சார்ந்து நிற்கும்அடிமைத்திற முடையோமென்னும் உணர்ச்சி நிகழப் பெற்றுச் செய்யும் வழிபாடெல்லாம் எத்துணை யிழிந்தன வாயினும் அவ்வவர் நிலை வேறுபாட்டால் அவையும் பொருத்த முடையனவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/198&oldid=1591168" இலிருந்து மீள்விக்கப்பட்டது