உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

241

பொருள் தோன்றுகின்றதெனப் பலமுகத்தானாராய்ந்து கூறியதென்னை யெனின்; அவர் செய்த ஆராய்ச்சி உண்மை யுடையதன்று, ஏனென்றால், அவர் செய்த அவ்வாராய்ச்சி யினைத் திரும்பவும் நுணுகி யாராய்ந்த ‘டிண்டல்' (Tyndall) என்னும் பேராசிரியர் தாமாராய்ந்து கண்ட முடிபாக, உயிரில்லாப் பொருளிலிருந்து உயிருடை ய

தோன்றாதென்றும்,

ாருள்

உயிருள்ள பாருட் சேர்க்கை யிலிருந்தே பிறிதோருயிர் தோன்றுகின்றதென்றும் அறி வுறுத்தி யுறுதி கூறியிருக்கின்றார்' ஆகவே, அறிவில்லாப் பருப்பொருளி லிருந்து அறிவுடைய நுண்பொருள் தோன்று மென்றல் உண்மை யாராய்ச்சிக்கு ஒவ்வாதென்று உணர்தல் வேண்டும்.

இனி, ஏகான்மவாதங்கூறும் ஒரு சாரார் சடமென்றுஞ் சித்தென்றும்இரண்டில்லை; சடமே சித்து, சித்தே சடம், பிரமத்தினின்றே நெருப்பிற் புகைபோல மாயையாகிய சடப்பொருளுண்டாம் என்று கூறுவர், அவர் கூற்று மேலே காட்டிய உண்மையாராய்ச்சிக்கு ஒவ்வாமையானும்; நெருப்பிலுண்டாகும் புகை நெருப்பை யணைந்த விறகின் காரியமேயல்லாது நெருப்பின் காரியம் அன்றென்பதற்குக் கனிந்த தணலிற் புகையுண்டாகக் காணாமையே சான்றாமாக லின் இவ் வுவமையின் தன்மையை யுற்றுணராது, இதனைக் கொண்டு தூய அறிவுப் பொருளாகிய பிரமத்தினின்று அறிவில்லாச் சடப்பொருளாகிய மாயை தோன்றுமென்றல் ஒருவாற்றானும் பொருந்தாமையானும் ஏகான்மவாதிகள் கூறும் பொருள் ஏற்கற்பாலதன்று. எனவே, அறிவில்லாப் பொருள்களும் அறிவுடைய உயிர்ப் பொருள்களும் எக் ய காலத்தும் வெவ்வேறாம் இயல்புடையவாகவே யிருக்கு மென்று

கடைப்பிடித்துணர்தல் வேண்டும்.

இனி, இத் தன்மையவாகிய இரு கூற்றுப் பொருள் களுள், அறிவில்லதாகிய சடப்பொருள் தானே இயங்க மாட்டா தாகலின், அதனை இயக்குதற்கு அறிவுடைய பிறி தாரு பொருளின் சேர்க்கை அதற்கு இன்றியமையாது வேண்டப் படும். அஃதொக்குஞ், சடப்பொருளை இயக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/266&oldid=1591236" இலிருந்து மீள்விக்கப்பட்டது