உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

245

அற்றன்று இறைவன் பொருள்களிலும் பாருள்களிலும் உயிர் களிலும் அருவாய் அவற்றின் அகத்தே மட்டும் இருப்பானல்லது புறத்தே இருப்பானல்லனென அருவ வாதிகள் கூறுமுறை போலாவது நுவலாமல், அவை இரண் டனகத்தும் புறத்தும் இருப்பனென அடிகளார் அருளிச் செய்த தென்னையெனிற் கூறுதும்; கடவுள் உருவமாயே இருப்ப னென்றாவது, அன்றி அருவமாயே இருப்பனென் றாவது சொல்லி, எல்லாம் வல்ல அவனது இறைமைக் குணத்தை ஒரு வரையறைப் படுத்தல் அவன்றன் வரம்பிலாற்றலுக்கு இழுக்காய் முடியுமாதலானும், அவன் உருவ மாயே இருப்பனென்றுரைப்பின் உருவு உடை ய உலகத்துப் பொருள்களில் ஒருவனாய் முடிவன் ஆகலானும், அருவ மாயே நிற்பனென் றுரைப்பின் அருவமாகிய வான் வெளி முதலிய பொருள்களில் ஒன்றாக வைத்து எண்ணப் படுவனாகலானும், புறத்தே இருப்பவனுக்கு அகத்தே செய்ய வேண்டுவனவும், அகத்தே இருப்பவனுக்கு புறத்தே செய்ய வேண்டுவனவும் அறிந்து செய்தல் இயலாமை யானும், பொருள்கள் உயிர்களின் அகத்தும் புறத்தும் இருக்க வல்லவனுக்கே அவ்விரண் டிடத்தும் அவைகட்கு ஆவன அறிந்து செய்தல் இயலு மாகாலானும், எல்லாம் வல்ல இறைவன் அருவாயும் உருவாயும் அகத்தும் புறத்தும் வரை யறையின்றி நிறைந்து நிற்பனென்பதே உண்மை முடிபா மென்று ஓர்ந்து கொள்ளல்வேண்டும், இவ்வுண்மை தேற்று தற்கே ஆசிரியர் மெய்கண்ட தேவநாயனார்,

"இல்லா முலைப்பாலுங் கண்ணீரும் ஏந்திழைபால் நல்லாய் உளவாமால் நீர்விழல் போல் - இல்லா அருவாகி நின்றானை யாரறிவார் தானே உருவாகித் தோன்றானேல் உற்று

என்றும், அவர்தம் மாணாக்கர் அருணந்தி சிவனார்,

“உலகினிற் பதார்த்த மெல்லாம் உருவமோ டருவ மாகி நிலவிடும் ஒன்றொன் றாகா நின்றஅந் நிலையே போல அலகிலா அறிவன் றானும் அருவமே என்னில் ஆய்ந்து குலவிய பதார்த்தத் தொன்றாய்க் கூடுவன் குறித் திடாயே”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/270&oldid=1591240" இலிருந்து மீள்விக்கப்பட்டது