உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

தென்று உணர்தல் வேண்டும், இறைவன் இங்ஙனம்

259

ன்ப

வுருவினனாயே நிற்குந் தனிப் பேருண்மை அறிவுறுத்து தற்கன்றோ மாணிக்க வாசகப் பெருமான்,

சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்

ஒருவனே சொல்லுதற்கரிய

ஆதியே நடுவே அந்தமே பந்தம்

என்றும்,

அறுக்கும் ஆனந்தமாக் கடலே

ஓரின்பவெள்ளத்து உருக்கொண்டு தொண்டரை

யுள்ளங் கொண்டார்

என்றும், இங்ஙனமே இராமலிங்க அடிகளார், “மகாதேவ மாலை”யில்,

தற்போத வொழிவினிடை நிறைந்து பொங்கித்

ததும்பிவழிந் தோங்கியெலாந் தானே யாகிச் சிற்போதத் தகம்புறமுங் கோத்துநின்ற

சிவானந்தப் பெருக்கேமெய்ச் செல்வத்தேவே

என்றும் அருளிச் செய்திருத்தலும் நினைவிற் பதிக்கற் பாற்று

அற்றேல், இறைவனோடொத்த அறிவினராக ஓதப் படுஞ் சதாசிவர் முதலாயினார் மாட்டும் இயற்கையின்பம் உளதாகல் வேண்டுமா லெனின்; அற்றன்று, சதாசிவர் முதலியோர்க்குத் தலைமை செலுத்துதலால் உண்டாகுஞ் சருக்காகிய 'அதிகாரமலம் ன்றுண்டென நூல்கள் ஓதுதலின், அவரது அறிவுஞ் சிறிது குறைபாடுடை யதே யாகும்; அஃதுடைய தாகவே, அவ்வறிவைப் பற்றி நிகழும் இன்பமுங் குறைபாடுடை யதாகவே யிருக்கும்,அதனால், அவர்க்குள்ள அக் குறைபாடு நீங்குதற்கும், அவர் எல்லாம் வல்ல முழுமுதற் சிவத்தின் உதவியையே அவாய் நிற்றலின், அவரும்அச் சிவத்தின் றிருவருட்பேரின்பத்தைத் தலைக்கூடி, அதன்கட் படிந்த பின்னரே நிறைந்த அறிவும்நிறைந்த ன்பமும் உடையராவ ரென்பது முடிக்கப்படும்,அங்ஙனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/284&oldid=1591254" இலிருந்து மீள்விக்கப்பட்டது