உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

❖ ❖ மறைமலையம் – 27

முடிக்கப்படவே, முப்பத்தாறு பருப்பொருள் நுண்பொருட் படிகளுக்கும், அவ்வப்படிகளில் வைகுவாராய் மும்மல இருமல ஒருமலப் பற்றுடைய மூவகை யாருயிர்த் தொகுதி களின் நிலைகளுக்கும் அப்பாற்பட்ட இயல்பினதாயுள்ள சிவம் ஒன்றே இயற்கை யுண்மையும் இயற்கை யறிவும் இயற்கை யின்பமும் உடையதாய், எல்லாவற்றையுந் தன் அருள் வெளியிலடக்கி அவற்றின் மேலும் எல்லையில்லாத விரிவினதாய் விளங்குமென்பதும் முடிக்கப்படும்,

பகுதி

அஃதொக்குங், காரியப்படாத மாயையின் பெரும் திஇயற்கை யுண்மை யுடையதாதல் முன்னரே பெறப் பட்டமையின், அஃது அவ்வாற்றால் இறைவனியல்போடு ஒத்ததாவான் செல்லுமா லெனின்; மாயையின் ஒரு பகுதி வியற்கையுண்மையுடையதாயினும் அதன் மற்றொரு பகுதி இயற்கையுண்மை வாயாதாய்க் காரியப்பட்டு மாறக் காண் லினாலும், அங்ஙனந் தன்னிலே ருவேறு

வகைப்பட்டு நிற்கும் அப்பொருள் ஒரே நிலையின தென்றற்கு இடம் பெறாமையினாலும், இறைவன் அதுபோல் அங்ஙனந் தன்னிலே இருவேறு வகைப்பட்டு ஒருவகையிற் காரியமாய் மாறுதலும் பிறிதொரு வகையிற் காரியமாய் மாறாமல் நிற்றலும் ஆகிய வேறுபாடு உடையனல்லனாகலானும் மாயை இறைவனோடொத்த உண்மை நிலையினதாதல் செல்லா தென்று கடைப்பிடித்தல் வேண்டும்,

அஃதொக்குமன்னாயினுஞ் சைவ சித்தாந்த நூல்களும்

இறைவனுக்கு அருவம் உருவம் என்னும் ருவகை

நிலைகளும் உண்டென்றோதுதலின், அவனும் மாயைபோற் காரியப் படுதலுடைய னென்பது பெறப்பட்டு, அங்ஙனம் ஓதும் அது மாயாவாதக் கொள்கையாய் முடியுமாம் பிற வெனின்; அற்றன்று, இறைவன் மாசற்ற தூய அறிவுப் பொருளே யல்லாமல், அறிவில்லா மாயைபோல்வான் அல்லன், அறிவில் பொருள் மட்டுமே ஒருநிலையிலிருந்து பிறிதொரு நிலைக்குத் திரிக்கப்படும்; மற்று அறிவுடைப் ளோ அங்ஙனந் திரிக்கப்படுதல் எஞ்ஞான்றும் ம் இல்லை; மண்ணானது குடமாகத் திரிக்கப் படுதல் போல,

பாரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/285&oldid=1591255" இலிருந்து மீள்விக்கப்பட்டது