உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சமயப் பாதுகாப்பு

287

குணத்திற் பிறக்கும் மெல்லோசை களாய் இருத்தலின், தமிழ் இன்பவடிவாய் விளங்குஞ் சிவத்தோடு ஒத்த இன்பம் வாய்ந்த தெய்வ மொழியாம் என்றுஞ் சைவசமயிகள் இவ் வுண்மையைக் கருத்திற் பதியவைத்து அதனை வளரச் செய்தற்கான எல்லா முயற்சிகளையுங் குறைவறச் செய்தல் வேண்டும்.

நம் செந்தமிழ் மக்களில் நூறாயிரம்பேர்க்கு இரண்டு மூன்று பேரே சிறிது படித்தவர்களா யிருக்கின்றார்கள்; மற்றவர்கள் எல்லாருங் கல்வியறிவு இல்லாதவர்களாயும், அறியாமைச் சேற்றிற் புதைந்து கிடப்பவர்களாயும் இருக்கின் றார்கள். உலகத்தில் இவ் விந்தியநாட்டைத் தவிர மற்றைப் பெரும்பாகங்களில் இருப்பவர்க ளெல்லாருங் கல்வியிலும் ஞானத்திலும் உழவிலுங் கைத்தொழிலிலும் வாணிகத்திலும் நாளுக்குநாள் மேம்பட்டுவர, நமது நாட்டிலுள்ளவர்களோ- அவர்களிலுந் தமிழர்கள், இவற்றில் மிகவுந் தாழ்ந்த நிலைமையிலிருக்கின்றார்கள்! இவர்களை இனிக் கல்விச் சாலைகளுக்கு அனுப்பிக் கல்விகற்பித்தல் இயலா தாகலின், ஊர்கள்தோறும் நகரங்கள்தோறுங் கழகங்கள் வைப்பித்து அவற்றின் வாயிலாகத் தமிழுஞ் சைவமும் உணர்ந்த அறிஞரைப் பல இடங்கட்கும் அனுப்பித், தமிழ் நூற் பொருள்களையும் சைவநூற்பொருள்களையும் விளக்கமாக அறிவுறுத்திவருதல் இப்போது உடனே செயற்பாலதான நன் முயற்சியாகும். தமிழ்கற்றோர் தொகை மிகவுஞ் சுருங்கிப் போதலால், ‘தமிழ் அறிஞர்க்குப் பொருள் ஏன் வேண்டும்?' என்று ஏளனமாய் உரையாமல், அவர்க்கு ஏராளமாய்ப் பொருளுதவி செய்து, கல்வியில் எல்லை யின்றிக் கற்று அதனைப் பிறர்க்கும் அவருக்கு மனக் கிளர்ச்சியினை

பயன்படுத்தும்படி

விளைவித்தல் வேண்டும்.

இனிச் சிவபிரான் கோயில்களில் நிறுத்தப்பட்டிருக்குந் திருவுருவங்கள், இறைவனுக்கு என்றும் உரிய அருளுரு வத்தையும், அன்பர்க்கு அருள்செய்யும்பொருட்டு முதல்வன் ரொருகாற்கொண்ட

திருவுருவத்தோற்றங்களையும் அன்பர்க்கு நினைவில் எழுப்புதற் பொருட்டு அமைத்த 5! வடிவங்களேயாகும். இவ்வடிவங்களை வணங்கச் செல்லும் அன்பர்கள் இவற்றைக் கண்டவுடன் ஐயன் அருள் உருவங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/312&oldid=1591282" இலிருந்து மீள்விக்கப்பட்டது