உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 28.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

மறைமலையம் - 28

“காட்டிய நெறியின் உள்ளந் தண்டறக் கழுத்தினோடே ஊட்டியும் அரியா நின்றார் உறுபிறப் பரிவா ரொத்தார்.”

எனக் கூறிய செய்யுட்கண்ணுள்ள 'ஊட்டியரிதல்' என்னுஞ் சொற்றொடரைத் திருக்களிற்றுப்படியாரில் (19), “ஊட்டிய றுத்தவற்கே ஊட்டியறுத்தவரை "என என உய்யவந்த தேவ நாயனார் எடுத்தாண்டிருத்தலின் இவரும் இவராசிரியருஞ் சேக்கிழார்க்குச் சிறிது பின்னே யிருந்தமை திண்ணமா மென்க.

இவ்வாற்றால், 'திருவுந்தியார்,’ ‘திருக்களிற்றுப் படியார்’ என்னுஞ் சைவசித்தாந்த நூல்கள் இரண்டனையும் அருளிச் செய்த உய்யவந்ததேவ நாயனார் இருவரும் இற்றைக்கு எரு0 ஆண்டுகட்கு முன்னே இருந்தாரெனக் கோடல் இழுக்காது. ங்ஙனம் இவ்விருவரும் மெய்கண்ட தேவர்க்கு முன்னிருந்து, அவர் 'சிவஞானபோதம்' இயற்று தற்கு முன்னரே ‘திருவுந்தி யார்,’ ‘திருக்களிற்றுப்படியார்' என்னும் நூல்களை ஆக்கி யிருத்தல் கண்டு போலுஞ், சித்தாந்த நூல்கள் பதினான்கனையுந் தொகுத்துக் கூறும்,

"உந்தி களிறு உயர்போதஞ் சித்தியார்

பிந்திருபா உண்மை பிரகாசம் -- வந்த அருட் பண்புவினா போற்றிகொடி பாசமிலா நெஞ்சுவிடு உண்மைநெறி சங்கற்ப முற்று.'

وو

என்னும் பழையவொரு வெண்பாச் செய்யுள், முதலிலே 'திருவுந்தியார்,' 'திருக்களிற்றுப்படியார்' என்னும் நூல் களையும், அவற்றின்பின் சிவஞான சித்தியார் முதலான ஏனைப் பன்னிரண்டு நூல்களையும் அடைவே வைத்தோதுவ தாயிற்று. என்றிதுகாறும் ஆராய்ந்துரைத்த வாற்றால், திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் என்னும் இரண்டு நூல்களுமே, சைவசித்தாந்த நூல்கள் பதினான்கனுள் மிகப் பழையனவாய் நிற்றல் தெளியப் படுமென்பது.

4. சிவஞானபோதம்

னிச், சைவசித்தாந்த நூல்களில் மேற்கிளந்த திருவுந்தி யார், திருக்களிற்றுப்படியார் என்னும் இரு நூல்களும், பிறவித் துன்பத்தை நீக்கி உயிர்கள் இறைவன்றிருவடியைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_28.pdf/251&oldid=1591586" இலிருந்து மீள்விக்கப்பட்டது