இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாவலர்கள் பார்வையில் மறைமலையடிகள்
281
முற்றிய புலமையாளர்
நம்மொழிப் புலமை யெல்லாம்
நடுத்தெருப் புலமை யாகும்
செம்மொழி பேசி வந்த
திருமறை மலையார் பெற்ற
மும்மொழிப் புலமை யன்றோ
முற்றிய புலமை அன்னார்
தும்மலும் கல்வித் தும்மல்
தூக்கமும் கல்வித் தூக்கம்
பாவலர். சுரதா
(மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-35)
இவர் இல்லையேல் காவலேது?
தமிழ்மட்டும் படித்தவர்கள் தமிழைச் சொன்னார்
சமற்கிருதக் காரர்களோ தம்மைச் சொன்னார்
அமைதிறிநை மறைமலையார் இரண்டுங் கற்று
ஆம் உண்மை தமிழ்க்கடலே உயர்ந்த தென்றார்
உமிமூடி இருந்தாலே நெல்தான் என்றே
உரைத்தவர்க்குப் பதரென்ன என்று சொன்னார்
இமை இன்றேல் விழிகட்குக் காவல் ஏது?
இவர்இலையேல் அன்றக்ைகுக் காவல் ஏது?
- பாவலர் கா. வேழ வேந்தன்
(மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-35)