284
மறைமலையம் - 28
மறைமலையே வாழி!
வருக தமிழன்னை மாண்பார் அருளே உருவாகி வந்த ஒருவ -- பெருவாழ்க்கை
உற்ற தொருகுடியில் ஓங்குமில் வாழ்வெல்லாம் பெற்றும் அவைதுறந்த பெம்மானே -- மற்றுலகில் இல்லை கலைகளிவன் ஏய்ந்தகல் லாதவென வல்லாரும் போற்றுகலை மாமணியே--எல்லையறு செந்தமிழிற் பல்வகையாய்ச் சேர்துறைகள் எவ்வெவற்றும் முந்து பெரும்புலமை முற்றியோய் வந்த
உரையார் வடநூலில் ஓங்காங்கி லத்தில் வரையாப் பெரும்புலமை வாய்ந்தோய்--வரைநின் எழுத்தின் தனிச்சீரை எவ்வழியுந் தேர்ந்து வழுத்தாதார் யாரிந்த மண்ணில்--பழுத்துமிகு மெல்லினிமை சான்றுமணம் வீசுங் கனியினையும் வெல்லும் உரைநடையை வேண்டாரார்--மல்கு பெருநூல் எதற்கும் பிறழா துரைக்கும்
பொருளின் வளமெவரே போற்றார்--தெருளார்ந்த
மேலைப் புலத்தோரும் மெச்ச வியற்றும்நின் நூலின் பெருஞ்சீர் நுவலாரார்--சாலப்
பெருகும் அவைக்கண்ணின் பேருரைகள் கேட்டே
உருகி நிறைமகிழ்தம் உள்ளம் மருவினராய் வானின் அமிழ்தே மலையத்தென் காலேநல்
தேனருவி யேஎன்னச் செப்பாரார்--மேனிலைசேர்
கல்லூரி போற்றுங் கணக்காயர் ஆகியநாள்
சொல்லின் திறனோர்ந்து சொல்லாரார்--பல்வளஞ்சேர்