288
மறைமலையம் - 28
தன்னேரில்லா மலை
உலைவின்றித் தமிழ்மொழிக்கே உழைத்தா ரென்றோம் உண்மையிது; ஊக்கமுடன் தமிழின் ஆக்கம் கலையென்றே தன்வாழ்நாள் கழித்த அண்ணல் கண்டதிலை தமிழ்நாட்டில் தன்னே நில்லா மலையென்றோம்; மாகடல்மா ணிக்க மென்றோம்
மஞ்சுதமிது வளம்பெறவே வாழ்ந்தா ரென்றோம் இலையிந்த உலகெங்கும் இவர்போல் சிந்தித்
தியற்றிடம் நூல் வல்லார்க ளென்றோ மின்றே.
―
முத்தமிழ் மணி
(மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-40)
மறைமலையடிகள் நாவலர் நாட்டார்
வண்புகழ் பண்டித மணியார்
துறைகலை போய் சுப்பிர மணியத்
தோன்றலார், ஞானியா ரடிகள்
முறைபுகழ் அறிஞர் பாரதியார், நடன மூதறி ஞர் திரு.வி.க.
பிறபிற பெரியோர் புலமையும் தொண்டும் பெரிதுணர்ந் தவரடி பணிவோம்!
தனித்தமிது இயக்கத் தந்தை!
சைவசித் தாந்தச் சான்றோர்!
முனைத்தநற் கொள்கை வீரர்!
மும்பொழிப் புலமை வேந்தர்!
மனித்தருள் தெய்வம் போன்ற
மறைமலையடிகளார் தம்
ஏனைப்பல சிறப்பும் போற்றி
இனிதவர் நெறிநின் றுய்வாம்!
- ந.ரா. முருகவேள்.
மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் பக்-147)