உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
165

நாணயத்துண்டு ஒன்றிற்குச் சில்லறை அகப்படாமல் அவரும் நானுமாய் ஒரு விடுதியிற் பானகம் வாங்கி அருந்தி அதனை மாற்றிக் கொண்டதான ஓர் அடையாளத்தை அவர்க்குத் தெரிவிப்பையாயின், அவர் அதனை நினைவு கூர்வர்,” என்று அவர் பெயர் ஊர் முதலிய வரலாறுகளெல்லாம் முற்றக்கூறி மறைந்துபோயிற்று. இக் கனவு கண்ட கனவான் கனவான் இதன் வரலாறுகள் எல்லாம் நன்கு மனத்திற் பதியப்பெற்றவராய் விழித்தெழுந்து கனவின்கண் தம் தந்தையாற் குறிப்பிடப்பட்ட ஊருக்குச் சென்று அங்கே யிருந்த அப் பெரியவரைக் கண்டுபிடித்தார். அவரிடம் இறந்துபோன தம் தந்தைக்காக அத்தகையதோர் அலுவல் நடத்திய துண்டாவென்று கேட்டார்; அவர் அதனை நினைவுகூரக் கூடாமையால் பிறகு தம் தந்தை சால்லிய அடையாளப்படி போர்த்துக்கேசிய நாணயத்தைப் பற்றிய குறிப்பை எடுத்துச் சொல்லவே முன் நடந்தவை யெல்லாம் அவர்க்கு முற்றும் நினைவில் வந்தன. நினைவில் வரவே அவர் தம்மிடமிருந்த ஆதரவுகளை யெல்லாம் உடனே தேடிப் பார்த்து, இவர் தம் தந்தைக்குரிய முத்திரைச் சீட்டை எடுத்துக்கொடுத்தார். அச் சீட்டைக்கொண்டு அவர் தமது வழக்கை வென்று அமைதி பெற்றார்.

இங்ஙனமே இனி வரற்பாலனவாகிய நிகழ்ச்சிகள் கனவின்கண் முற்றோன்றிப் பலர்க்குப் பல நன்மைகளைப் புரிந்த வரலாறுகள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன. இங்கெடுத்துக் காட்டிய உதாரணங்கள் அவ்வளவும் உண்மையாக நடந்தவைகளாகும்; வெறுங் கட்டுக் கதைகள் அல்ல. இவ்வாற்றால், மக்கட்குக் கனவுநிலையிற் றோன்றும் அறிவு நிகழ்ச்சிகள் எல்லாம் மேற்சொன்ன பிறவிகளைப் பற்றி வருவனவும், இப் பிறவியைப் பற்றி வருவனவும், இப் பிறவியினும் இப் இனி வரற்பாலனவாகிய நிகழ்ச்சிகளைப்பற்றி வருவனவுமாய் இருத்தல் வெள்ளிடை மலைபோல் விளங்கற்பாற்று.

எனவே, கனவினும் நனவினும் நம்மனோர்க்குத் தோன்றும் நினைவனுபவங்களிற் பெரும்பாலன பலவகை யுலகங்களிற் சென்ற பலவேறு பிறவிகளின் பயனேயாம் என்பதும் இதனிலிருந்து பெறப்படும். இவ்வுண்மை, இப் பிறவியில் நாம் இவ்வுலகத்தில் வாழ்ந்துவரும் வாழ்க்கையின் இயல்பை ஒருசிறிது உற்று நோக்கினாலும் தெளிவாய் விளங்கும். ஒவ்வொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/198&oldid=1625189" இலிருந்து மீள்விக்கப்பட்டது