உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

5. அறம் இன்பத்தையே முதலும்

ஈறுமாகு உடையது

இனி, அம்மறுப்புரைக்காரர், அறமே முதல் நிற்கற்பாலது. இன்பம் அந்நீரதன்று என்றதூஉம் பொருந்தாமை காட்டுதும். ஒரு புல்நுனிமேல் நிற்கும் நீர்த்துளியிற் பெருக்கக் கண்ணாடியின் உதவிகொண்டு காணப்படுஞ் சிற்றுயிர்கள் முதல் மக்கள் ஈறான எல்லா உயிர்கள் மாட்டும் இன்ப உணர்ச்சியும், இன்பத்தைப் பெறும் வேட்கையும், அதற்கேற்ற முயற்சியும் ஒரு தினைத் தனையும் பிழையாமற் காணப்படுகின்றன. அதுபோல் அறத்தைப் பற்றிய உணர்ச்சியும், அதனைப் பெறும் வேட்கையும், அதற்காம் முயற்சியும் அங்ஙன மெல்லா உயிர்களிடத்துங், காணப் படாமல், ஆறறிவுடைய மக்களுள்ளும் பிற உயிர்கள் பால் அன்பு நிகழப்பெற்ற ஒருசிலர் மாட்டே காணப்படுகின்றன. இவ்வாற்றால் இன்ப உணர்ச்சியினும் அறவுணர்ச்சி மிகச்சிறுகிய நிலையில் உளதாதலாலும், அதுவும் பிற உயிரின் இன்பத்தைத் தம்முயிரினின்பத்தோ டொப்பக் கருதினார்பாலன்றி உளதாகாமையுந் தேர்ந்து காணவல்லார்க்கு இன்ப உணர்ச்சி யின் வாயிலாகவே அறவுணர்ச்சி விளைவதன்றி, அறவுணர்ச்சி வாயிலாக இன்ப உணர்ச்சி விளையமை இனிது விளங்கா நிற்கும். இது பற்றியன்றோ தெய்வத் திருமூலரும்,

'நான்பெற்ற. இன்பம் பெறுகஇவ் வையகம்

என்று அருளிச் செய்தார். ஒருவன் தான்பெற்ற இன்பத்தை இவ்வையகத்துள்ள எல்லா உயிர்களும் பெறுதல் வேண்டுமென விழைந்து, அதற்கேற்ப முயலும் முயற்சியே அறம் எனப்படும். பிறவுயிரின் இன்பத்தைக் கருதாது செய்யும் முயற்சிகளெல்லாம் அறத்துக்கு மாறான மறமெனப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/118&oldid=1592281" இலிருந்து மீள்விக்கப்பட்டது