உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

93

ஒழுக்கத்திற்கும் ஒரு சிறிதும் பயன்படாவாயிருந்தும், போலியாக எங்கும் பரவி வரலாயின. இதுகண்ட தமிழ்ச் சான்றோர்கள் அப்புறச்சமயக் கோட்பாடுகள் மக்கட்குப் பயன்படாமையின் உள்ளீடில்லா வெறும் பதர்களாதல் தெரிந்து, உண்மை உலகியல் ஒழுக்கத்திற்கு ஏற்ற அறத்தின் கூறுபாடுகளைத் தமிழ்த் தொல்லாசிரியர் கொண்ட உண்மைப் பயன்றரு முறையில் இன்பத்தொடு படுத்து விளக்குவான் புகுந்தனர். அங்ஙனம் புகுந்தாருள் தலைநின்றவரான திருவள்ளுவனார், தங்காலத்துத் தம்மோடுடனிருக்கும் மக்கள், பளத்த சமண்மயக்குரையிற் சிக்கி அறத்திற்கே உயர்வு சொல்லுதல் கண்டு அவர் வழியே சென்று அவரைத் திருத்துவாராய், அறத்தை முன் வைத்து நூல்செய்வாராயினர். அங்ஙனம் நூல் செய்கின்றுழிப், பெரும்பாலும் இம்மையையே நோக்கின இல்லறமும், பெரும்பாலும் மறுமையையே நோக்கின துறவறமும் என அறத்தை இரண்டாக வகுத்து, அவ்விருவகை யறமும் பொருளை இன்றியமையாத கருவியாக அவாவுதல்பற்றிப், பொருளை அதன்பின் வைத்து அவ்வாறு பாருள் துணையாக அவ்விருவகை அறத்தானும் அடையப்படும் இன்பமும், இம்மைக்கண் நுகரப்பட்டு இல்லறத்துக் கேதுவாய் நிற்கும் காதலின்பமுந், துறவறத்தின் பயனாய் மறுமைக்கண் நுகரப்படுந் திருவருள் இன்பமு மென இரண்டாதல் தெரித்து, இன்பத்தினை இறுதிக்கண்ணும் வைத்து நூல் யாப்பாராயினர். ஆகவே, இறுதிக்கண் அவர் நிறுத்திய இன்பத்துப்பால் காமவின்பத்தினையே நுதலுவதென்று அம்மறுப்புரைகாரர் கூறியது பொருத்தமில் கூற்றாதல் காண்க. இறுதிக்கண் நின்ற இன்பத்துப்பால் இல்லறத்தின் பாலதான காதலின்ப மொன்றனைமட்டுமே உணர்த்துவதன்று. ஆழ்ந்து நோக்கு வார்க்கு, அது துறவறத்தின் பாலதான திருவருளின்பத் தையும் ஒருங்கு உணர்த்துவதே யாகும். இங்ஙனமே தமிழ் நூல்களிற் கூறப்படும் அகப்பொருட் காதலொழுக்கமெல்லாம் இம்மையின்ப மொன்றனையே உணர்த்தாமல், திருவருளின் பத்தையும் உடனெடுத்து ஓதுவதென்பதற்குச், சைவசமய ஆசிரியரில் முதல்வரான மாணிக்கவாசகப்பெருமான் திருச்சிற்றம்பலக்கோவையார் அருளிச்செய்தமையும், ஏனை அப்பர், சம்பந்தர், சுந்தரர் முதலான நம் சமயகுரவர்களுந் தாமருளிச் செய்த திருப்பதிகங்களில் ஆங்காங்கே தலைவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/126&oldid=1592313" இலிருந்து மீள்விக்கப்பட்டது