உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

103

காதலன்பின் வயப்பட்ட தலைவன்றலைவியர் சேர்க்கையோ அவர்தம் உள்ளத்தையே யன்றி உடம்பையும் ஒருங்கு பிணித்து, அன்பின் சேர்க்கைகள் எல்லாவற்றிற்கும் முடிந்த நிலையாய்த் திகழ்வதாகும். இங்ஙனம் நிகழும் இம்முடிந்த சேர்க்கைக்கண், உண்டாம் இன்பப்பெருக்கின் நிலை அந்நிலைக்கண் வைகும் அவ்விருவர்க்கல்லாமல் வேறெவர்க்குந் தினைத்தனையும் புலனாகாது; இஃது உணர்த்துதற்கன்றே, தெய்வப்புலமைத் திருவள்ளுவர்,

“தாம்வீழ்வார் மென்றோட் டுயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு

என்றருளிச் செய்ததூஉம், மாணிக்கவாசகப் பெருமான்,

"உணர்ந்தார்க் குணர்வரி யோன்தில்லைச்

சிற்றம் பலத்தொருத்தன்,

குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச் செவ் வாய்இன் கொடியிடைதோள்,

புணர்ந்தாற் புணருந் தொறும்பெரும் போகம்”

என்றருளிச் செய்ததூஉமென் றுணர்ந்துகொள்க. இவ்வாறெல்லாம் இவ்வுலகத்து நடைபெறாநிற்கும் இந்நால்வகைச் சேர்க்கைகளும் நன்களந்து காணவல்லார்க்கு, அவையெல்லாம் அன்பினையும் அதற்கு வித்தான இன்பத்தினையுமே உயிராய்க்கொண்டு நிற்றல் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெள்ளிதிற் புலனாம். எனவே, அன்புக்கு முதன்மை சொல்லும் இடங்களிலெல்லாம் அதற்கு முதலான இன்பமும் உடன்விராய் நிற்குமென்றும், அது குறித்தே மாணிக்கவாசகப்பெருமானும் இறைவனை றைவனை “இன்பமே என்னுடை அன்பே” என அவ்விரண்டையும் ஒருங்கு புணர்த்தோதினாரென்றும் உணர்ந்து, அம்மறுப்புரைகாரரின் பிழைபாட்டினைத் தெரிந்துகொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/136&oldid=1592352" இலிருந்து மீள்விக்கப்பட்டது