உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

12. காமம் என்பது இருபொருளுந் தரும்

னி, யாம் காதலின்பம் உயர்ந்ததெனவுங் காமவின்பந் தாழ்ந்ததெனவுங் கூறியதனை அம்மறுப்புரைக்காரர் பிழையெனப் புகன்று, காமம் என்பது உயர்ந்த இன்பத்தினையே

யுணர்த்துமெனக் கிளந்ததனைச் சிறிது ஆராய்வாம்.

'காமம்' என்னுஞ் சொற் பொதுவாய் ஓர் ஆண்மகற்கும் ஒரு பெண்மகட்கும் இடைநிகழும் உடம்பின் சேர்க்கையால் உண்டாம் இன்பத்தினை உணர்த்து மன்றி, யாண்டும் அஃது உயர்ந்த இன்பத்தினையே உணர்த்துவதன்று. அங்ஙனமின்றி மறுப்புரைக்காரர் கூறுமாறு அஃது உயர்ந்த இன்பத்தினையே யுணர்த்துவதொன்றாயிற் “காதற்காமங் காமத்திற் சிறந்தது என யாம் மேலெடுத்துக்காட்டிய பரிபாடற் பழஞ்சான்றோர்தம் மெய்ம்மொழிக்கு யாங்ஙனம் பொருளுரைப்பர்? காமம் என்னுஞ் சொல்லே உயர்ந்த வின்பத்தினை யுணர்த்துமாயின் ஆசிரியர் குன்றம் பூதனார் 'காதற்காமம்' என அதற்கு வேறு வறு அடைமொழீ கொடுத்ததுங், காதற்காமமே காமவின்பத்திற் சிறந்த தென்றதும் என்னை? மக்கள் பாற் பொதுமையில் நிகழும் காம வின்பங்கள் பலவற்றுட், பாதலன்பின் விளைவான காமமே சிறந்ததென அவர் உரைக்குமாற்றாற், காமம் என்னுஞ் சொல் உயர்ந்த காமத்திற்கும் இழிந்த காமத்திற்கும் பொதுவாய் நின்று புணர்ச்சி யின்பத்தினை யுணர்த்துமென்பது புலப்பட வில்லையோ? ஆசிரியர் நக்கீரனார்

றையனாரகப் பெருளுரை' யிற் “களவு கொலை காமம் இணைவிழைச்சு என்பனவன்றோ சமயத்தாரானும் உலகத்தாரானுங் கடியப்பட்டன?" அவற்றுள் ஒன்றன்றாலோ இது? எனின்; அற்றன்று, களவு எனுஞ் சொற்கேட்டுக் களவு தீதென்பதூஉங், காமம் என்னுஞ் சொற்கேட்டுக் காமத் தீதென்பதூஉம் அன்று; மற்றவை நல்லவாமாறும் உண்டு” என்றுரைத்த மெய்யுரையாற்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/137&oldid=1592356" இலிருந்து மீள்விக்கப்பட்டது