உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

123

சாதியுயர்வினையே

தழுவினரா? இல்லையே. அவ்வாறிருக்கச் சுந்தரர்தம் முற்பிறவி வரலாறு தெரிப்பதாகக் கிளக்கும் இப்பொய்க்கதையினை மட்டும் அவர் நம்பிக் கூறினாரென்று அறிவுடையோர் சொல்ல முற்படுவரோ? இருந்தவாற்றால், இக்கதையின் பொய்ம்மைத் தன்மையினை நடுநின்று நன்கு ஆராய்ந்து பார்க்கும் அறிஞர்கள், சிவ அந்தணர்குலத்திற்றோன்றியருளின சுந்தரர் தமது மரபினர் அல்லாத பரவை சங்கிலியாரை மணந்தது குற்றமாமென எந்நேரமும் தமது நினைந்திருந்தவரான ஒரு பார்ப்பனரால்தமது சாதிக்குக் குறைவு வந்துவிடலாகாதெனுங் கருத்தால், அப்பொய்க்கதை கட்டிச் சேர்க்கப்பட்டதென்பதைத் தெற்றென உணர்ந்துகொள்வர். கைலையிற் செய்த குற்றத்திற்காகச் சுந்தரர் இந்நிலவுகத்திலுங் தமது சாதிவரம்பு கடந்து குற்றமாவது செய்து ஒறுக்கப் பட்டாரென்று ஒரு காரணங் காட்டி, அவ்வாற்றால் தமது சாதிவரம்பைக் காத்துக்கொள்ளப் பெரிதும் அவாவுற்று அப்பார்ப்பனர் புனைந்து செருகினமை வேறுமோருண்மையாலும் புலனாகாநிற்கின்றது; என்னை? முதலில் ஒரு குற்றைத்தைச் செய்தவர் பின்னும் அக்குற்றத்தினையே செய்குவராயின், அது முன்செய்த குற்றத்திற்குக் கழுவாயாகுதல் செல்லாமையின் என்பது. சுந்தரர் கைலையில் அம்மாதர் மேற் காமுற்றது குற்றமாயின், அது தீர்வதற்கு அவர் அவர் அம்மண்ணுலகிற் காம நினைவற்றுத் தவத்திலன்றோ உடை டையறாது அமர்தல் வேண்டும்; அவ்வாறின்றி அவர் மீண்டும் அம் மாதர் மேல் மையல் காண்டு இன்ப நுகர்ந்திருத்தல் கைலையிற் காமுற்ற குற்றத்திற்குக் கழுவாயாகுமோ? அற்றன்று, இறைவன் திருக்கைலையைச் சார்ந்தார்க்கு மாதரைக் காமுறுதல்

அப்பொய்க்கதையினைப்

குற்றமாகலின், அக் குற்றத்திற்காகவே அவர் அத்

தெய்வவுலகினின்று இம் மக்களுலகிற்குக் கீழ் நூக்கப்பட்டார்; அஃது அவர்க்குக் கழுவாயாமெனின்; இறைவனடி சேர்ந்தார்க்குங் காமவிருப்பு நிகழுமாயின, இறைவனடியைச் சேர்தலில் இன்பமில்லை யென்பது பெறப்பட்டு அது,

“தாட்டா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி

என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/156&oldid=1592432" இலிருந்து மீள்விக்கப்பட்டது