உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

66

  • மறைமலையம் லயம் - 30

"தினைத்தனை யுள்ளதோர் பூவினிற்றேன் உண்ணாதே நினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தோறும் எப்போதும் அனைத்தெலும் புண்ணெக ஆனந்தத் தேன்சொரியுங் குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ”

என்றும் போந்த அருமைத் திருமொழிகட்கெல்லாம் மாறாம்.

ஆண்டு

அற்றன்று, ஆலாலசுந்தரர் இறைவன் திருவடிப்பேறு எய்தியவரல்லர்; இறைவன் திருவுலகு சேர்ந்து ஆண்டு அவனை வழிபட்டமரும் அத்துணைப்பேறே வாய்ந்தவராவரெனின்; இம்மை யுலகத்து வழிபாடுபோ லன்றி, இறைவன்றன் உண்மையுருவினை நேரே கண்டு வழிபடும் அம்மை யுலக வழிபாடும் சுந்தரர் தங் கருத்தைத் தன்மாட்டு ஈர்க்கும் வலியிலதாயின், அதனாற் போதரும் பயன் என்னையோ வென்று வினா நிகழுமன்றே? அதனாலும், அக்கதை உண்மையன்றென்பது தெற்றென விளங்காநிற்கும். அதுவேயு மன்றி, மேன்மேலுள்ள நுண்ணிய தத்துவவுலகு களில் உள்ளாரும் ஆணும் பெண்ணுமா யிருந்தே கழிபேரின்பம் நுகர்வரென்று பௌட்கராகமங் கூறுதலை மேலெடுத்துக் காட்டின மாதலாற், சுந்தரர் அத் தேவ கன்னியரைக் காதலித்தது இறைவன் திருவுளக் குறிப்புக்கு மாறாகா தன்பதூஉம் போ தரும்; அதனாலும் அக்காதலைக் குற்றமென நுவலும் அக்கதை பொய்யென்பதே தேற்றமாம்.

மேலுந், திருக்கைலையிற் செய்த குற்றத்திற்காக இறைவன் அம் மூவரையும் ஒரேகுலத்திற் பிறப்பியாது, கந்தரரைச் சிவ அந்தண உயர்குலத்திலும், பரவை சங்கிலியாரை அதனிற் றாழ்ந்த பிற குலத்திலும், பிறப்பித்துப் பின்னர் அவரை ஒருங்குகூட்டி, “நீர் உயர்த்துக்கூறுஞ் சாதிவேற்றுமைக் கட்டுப் பாட்டினைச் சிதைத்தது, மக்கள் தம் இறுமாப்பால் வகுத்த சாதிக் கட்டுப்பாட்டில் நும் மிறைவற்கே விருப்பு இல்லை யோலும்!” என்று கடாவுவார்க்கு அம்மறுப்புரைகாரர் இறுக்கு மாறறியாது விழிக்கு நீர ராவராகலின், அவர் கூறும் அக்கதையே அவர் கொண்ட சாதிச் சருக்கினைத் தொலைக்கும் பெற்றியதாதலுங் காண்க. இதனால், ‘யானும் அறியேன் அவளும் பொய் சொல்லாள்' என்னும் பழமொழிப் பொருள் அம்மறுப்புரைகாரர் உரைகொண்டே புலனாகின்ற தன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/157&oldid=1592435" இலிருந்து மீள்விக்கப்பட்டது