உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

125

இங்ஙனமெல்லாம் ஆராய்ந்துபார்க்கவல்லார் எவர்க்கும், சிவ அந்தணராகிய சுந்தரர் தம் மரபின ரல்லாத பரவை சங்கிலியாரை மணந்தது குற்றமாமென நாட்டுதற்கு விழைந்த ஒரு பார்ப்பனரால் அக் கதை பொய்யாகப் புனைந்து, ருட சேக்கிழார் அருளிச் செய்த திருத்தொண்டர் புராணத் திடையே சேர்க்கப்பட்ட வுண்மை வெள்ளிடை மலைபோல் விளங்கா நிற்கும். வ்வாறாக, முன் இல்லாத கதைகள் பின்வருவோராற் புதிது புதிதாகப் புனைந்துகட்டிச் சேர்க்கப்படுதல் உண்டென்பதற்கு, ஆறுமுகம் நாவலர் வரைந்த பெரியபுராணவசனத்தில் ‘இறைவன்’ திருக்கலையில் ஒரு நாட் கண்ணாடியை யெடுத்து அதன்கட்டனது திருவுருவை நோக்க அது சுடர்விடு பேரழகாய் அதன்கட் பொலிந்துதோன்றக் கண்டு 'சுந்தரமே வா!’ என்று அழைக்க, அஃது ஆலாலசுந்தரராய்க் கண்ணாடியை விட்டுக் குதித்து நின்றது’ என்னும் ஒரு பொய்க்கதை சேக்கிழார் பெரிய புராணத்தில் இல்லாதிருந்தும் புதிதாக எழுதிச் சேர்க்கப்பட் டிருத்தலே சான்றாம். இங்ஙனமே சமணர் கழுவேறிய கதைக்குத் தேவாரப்பதிகங்களில் ஏதொரு குறிப்புங் காணப்படாதிருந்தும், அஃது எவ்வாறோ பெரியபுராணத்தில் வந்து நுழைந்துவிட்டது. மாணிக்கவாசகரொடு வழக்கிட்டுத் தோற்ற பௌத்தர்களைச் சக்கிலிட்டு அரைத்த கதை, பெரும்பற்றப்புலியூர் நம்பி யருளிய திருவிளையாடற்புராணத்தில் இல்லாதிருந்தும், அதற்குப் பன்னூறாண்டு கழித்துப் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற்புராணத்தில் வந்து சேர்ந்துவிட்டது. இன்னும் இவ்வாறே முன் நூல்களில் இல்லாத பல பின்நூல்களிற் சேர்க்கப்பட் டிருக்கின்றன. அவையெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டலுறின் இது மிக விரியும். ஆதலால், ஒரு புராணத்திற் சொல்லப்பட்டிருப்பது கொண்டு, ஒரு கதையின் பொய்ம்மை மெய்ம்யிைனை நன்காய்ந்து பாராது அதனை அவ்வாறே நம்புதல் வழுவாமென்க. எனவே, சுந்தரமூர்த்தி நாயனார் பரவை சங்கிலியாரை L மணந்த காதன்மண வரலாறு, தொன்றுதொட்டு வரும் பண்டைச் செந்தமிழச்சான்றோர் வகுத்த காதன் மணமுறையோடு ஒருங்கொத்து நிற்றலானும், அம்மணத்தைக் கூட்டுவித்தற்கு இறைவனே முன்நின்றானென ஆசிரியர் சேக்கிழார் ஆண்டாண்டு நன்கெடுத்துக் கூறுதலானும் அது குற்றமாதல் ஒருவாற்றானுஞ் செல்லாதென்றும்,

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/158&oldid=1592439" இலிருந்து மீள்விக்கப்பட்டது