உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

மறைமலையம் 30

-30

போக்கு

அதனைக் குற்றமாக நினைந்து அதற்கொரு விடுதற்பொருட்டுப் பின்வந்த பார்ப்பனர் பொய்யாகக் கட்டிச் சேர்த்த திருமலைச்சருக்கக் கதை சேக்கிழார் செய்த தன்றென்றுங் கடைப்பிடித்துணர்ந்து கொள்க.

இங்ஙனம் முழுப்பொய்யாகிய ஒரு கதையினைத் தமது சாதி யிறுமாப்பினாற் புனைந்துகாட்டிப் பெரியபுராணத்தின் முதலிலே சேர்த்துவிட்ட பார்ப்பனர்தம் பொய்யுரைக்கும், பார்ப்பனராற் சூத்திரத் சாதியினராக வைத்து எள்ளப்படும் அம்மறுப்புரைகாரர் தமது சூத்திரச் சாதியினுள்ளேயே தம்மினத்தவர்க்குந் தமக்கும் உயர்வுதேடிக் கொள்ளுதற்

பாருட்டு அ க்கதையினை உண்மையாய்க்கொண்டு

எழுதிவிட்ட போலி மறுப்புரைக்கும் வேற்றுமை காண்கிலம். அப் பொய்க்கதையை எடுத்துக்கொண்டு அவர் நிகழ்த்திய போலி மறுப்புரைகள் அத்தனையும், முயற்கொம்பு இரண்டு முழமா நான்கு முழமா என்று வழக்கிட்டார் வழக்குரைக்கும், "ஒப்பிலா மலடி பெற்ற மகன் ஒரு முயற்கொம் பேறித், தப்பில் ஆகாயப்பூவைப் பறித்தமை சாற்றினா" ருரைக்கும் தோழமையாக வைத்து அறிஞரால் நகையாடி விடற்பாலனவா மென்க.

ன்னும், அம் மறுப்புரைகாரர் ஆலாலசுந்தரரைப் பற்றி யெழுதியவற்றில் முன்னொடுபின் முரணாவன் பல. அவற்றுட் சில இங்கே காட்டுதும். நிலத்திற்போய்ப் பிறந்து இன்பம் நுகருமாறு சுந்தரரை இறைவன் ஏவியவழித், தம்மை இறைவனே வந்து தடுத்தாட்கொள்ளுமாறு அவர் வேண்டினாரென்று அக் கதையினை அவர் எடுத்துக் காட்டினார். தாம் வன்மைகள் பேசி இறைவனை வேண்டாதிருக்கையிலும் இறைவனே வலிய வந்து ஆட்கொண்டமை பற்றியே சுந்தரர் ‘வன்றொண்டர்’ எனப் பெயர் பெற்றார். அவ்வாறன்றித், தாம் வேண்டியதற் கிணங்கியே இறைவன் வந்து ஆட்கொண்ட துண்மையாயின், சுந்தரர்க்கு 'வன்றொண்டர்' எனும் பெயர் வழங்குதல் ஒக்குமோ? வன்மைகள் பேசினமையின் 'வன்றொண்டர்' எனப் பட்டாரெனின், வன்மைகள் பேசினது தாம் அவற்கு

ஆளாதலிற் கருத்தின்றி யிருக்க, இறைவனே வலியவந்து அவரை ஆட்கொண்டமை நன்கு விளங்குதலின், திருக்கைலையில் அவர் வேண்டியதற் கிணங்கியே இறைவன் போந்து அவரைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/159&oldid=1592444" இலிருந்து மீள்விக்கப்பட்டது