உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

மறைமலையம் லயம் -30

திருவள்ளுவனார், "அறிதோறு அறியாமை கண்டற்றால்' என்று கூறினமையாலுஞ் செவ்வனே விளங்கும் ஆகவே, பட்டினத்தடிகள் ஒருகாலத்துச் சொன்ன ஒரு கருத்தையே உறுதியெனக் கொண்டு, பிற்காலத்தில் அவர் அதனின் வேறாய்க்கண்ட வேறொரு முடிந்த கருத்தைக் கைக்கொளா தொழிதல் அறிஞர்பால் நிகழாது. முதலிற்றாம் மொழிந்த புறத்துறவினும், உள்ளந் தூயராய் நிற்கும் அகத்துற வே நூறுகோடி மடங்கு சிறந்ததாகுமென அவர் பின்னே வலியுறுத்தி மொழிந்தமையால்; அவ்வாறவர் பின்மொழிந்ததே அவர் தங் கருத்துறுதி யாகுமென்று கடைப்பிடிக்க. இங்ஙனங் கூறவே, உள்ளந்தூயரான உள்ளந்தூயரான சுந்தரமூர்த்தி நாயனார்க்கு, அவர்போல் உள்ளந் தூயரான பரவை சங்கிலியாரது கேண்மையே ‘நல்லாரிணக்கம்’ ஆவதன்றி, அவரைத் துறந்து ஏனைப் பிறரொடுமட்டுங் கேண்மை பாராட்டுதல் நம் தொல்லாசிரியர்

அஃதாகாதென்றுணர்க.

ம்

துறவு

என்பதற்குக் கொண்ட இம் மேதகுபொருளின் மாட்சி யுணராது, உலகத்தவரை ஏமாற்றிப் பழிபாவங்களிற் படும் மாயாவாதப் பகட்டுப் புறத்துறவினைப் பாராட்டும் அம்மறுப்புரைகாரர் சுந்தரமூர்த்தி நாயனாரையும் அவர் பரவை சங்கிலியார்பால் வைத்த காதற் கெழுதகை நேயத்தினையும் இகழாது மற்று என்செயமாட்டுவார்! அது

கிடக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/169&oldid=1592485" இலிருந்து மீள்விக்கப்பட்டது