உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

  • மறைமலையம் லயம் - 30

அப்பர் சுந்தரர் சாதிக்கட்டைச் சிதைத்து முறையே திருவமுது கொண்டதுந் திருமணஞ் செய்ததும் அவர் பெரியரான பிற் செய்த செயல்களாதலால், அவர்போற் பெரிய ராகாத நாம் அச்செயல்களைச் செய்தலாகாது என்றும், மற்று நாம் பெரியராதற்குச் சிவபிரானையுஞ் சிவனடியாரையும் ஓவாது வழிபடுதலே செயல்வேண்டும் என்றும் அம் மறுப்புரைகாரர் கரைந்தார். அன்பரோடு உடனிருந் துணவு காண்டும் மணம்புரிந்தும் அளவளாவுதல் பெரியரானபிற் செயற்பாலன வென்று கூறும் அவருரை கொண்டே, பெரியராகாமற் சிறியராய்ச் செருக்குற்று நிற்குங் காலங்களிற் சாதியுயர்வு தாழ்வு பேசிக்கொண்டு அன்பரோடு அளவளாவுதலின்றி இறுமாந்தொழுகுதலே செயல்வேண்டு மென்பது அவர்தங் கருத்தாதல் பெறப்படுகின்றது. இக்கருத்து அவரை யறியாமலே அவர்தம் போலி யுரையில் நன்கு புலப்பட்டு நிற்க, அக் கருத்துக்கு மாறாய் அதனை மறைத்துச், சிவபிரானையுஞ் சிவனடியாரையும் இடையறாது அன்பினால் வழிபட்டுப் பெரியராகல் வேண்டுமென்று மொழிந்து தம்மை நல்லவராக்கிக் கொள்ளப் பார்க்கின்றார். சிவபிரானுக்கு அன்புள்ளார் எல்லா உயிர்களிடத்தும் எல்லா மக்களிடத்தும் அன்பு பாராட்டுந் தன்மையராவர்; சிவனடியார்க்கு உண்மையன்புள்ளார், திருநீறுஞ் சிவமணியு மாகிய புறஅடையாளங்கள் மட்டுமே உடையாரைக் காணினும் அவர் தம்பிறப்பு வரலாறுகளைத் தினைத்தனையும் ஆராயாது அவர்பாற் கரையிகந்த அன்புமீதூரப் பெறுவர். இதற்குப், பெரியபுராணத்துப் போந்த நாயன்மார் வரலாறுகளே போதிய சான்றாம். சைவசமயாசிரியருஞ் சிவ அந்தண குலத்திற் பிறந்தருளியவருமான சுந்தரமூர்த்தி நாயனாரே,

“தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் திருநீல கண்டதத்துக் குயவனார்க்கு அடியேன்”

என்று அந்தணர் குலத்து அடியாரையுங் குயவர் குலத்து அடியாரையும் ஏதொரு வேற்றுமையுங் காணாது ஒருங்கு வைத்து வணக்கங் கூறினமையும் நினைவிற் பதிக்கற்பாற்றாம். ங்ஙனஞ் சிவனடியார்பால் உண்மையன்பு பூண்டு ஒழுகுவாரெவருஞ் சாதி யுயர்வுதாழ்வு சிறிதும் பாராது அவர்க்கு அடியராய்த் தொண்டு செய்து ஒழுகினமையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/171&oldid=1592493" இலிருந்து மீள்விக்கப்பட்டது