உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

141

தன்னைப் பற்றுதல்' என்னுங் குற்றத்தைச் சுமத்து மல்லவோ? உயிரென ஒன்றில்லை, எல்லாம் பிரமமேயெனக் கூறும் அம் மறுப்புரைகாரர் போல்வாரான மாயாவாதிகட்காயின் அவ்வாறு கூறுதல் பொருந்தும்; மற்றுப்,

“பதிபசு பாசம் எனப்பகர் மூன்றிற் பதியினைப் போற்பசு பாசம் அநாதி”

என்றும்,

‘அதுவென்னும் ஒன்றுஅன்று அதுவன்றி வேறே அதுவென்று அறி அறிவும் உண்டே'

(திருமூலர்)

(மெய்கண்டதேவர்)

என்றும் போந்த எம் ஆசிரியர் அருளுரைவழி பிழையாது நின்று, இறைவனைப் போலவே உயிர்கௌல்லாந் தமக்கென விழைவு அறிவு செயல்கள் (இச்சா ஞானக் கிரியைகள்) உடையவா மெனவும், ஆயினும் அவை வ மலத்தினால் மறைக்கப்பட்டு நிற்குமெனவுந், தம்மைப் பொதிந்த மலமாசு இறைவன்றன் றிருவருளுதவியால் நீங்க நீங்க அவ்வுயிர்கள் தமக்கியற்கையாவுள்ள அவ்விழைவு அறிவு செயல்கள் இனிது விளங்கப்பெறுமெனவும், மலத்தை நீக்குதற்கு உதவிசெய்யும் அவ்வளவே இறைவன் செயல் அவ்வுதவியைப் பெற்று மலப் பிணிப்பை அவிழ்த்துச் சிவபிரானிடத்துஞ் சிவநேயம் வாய்ந்தவரிடத்தும் விழைவுகொண்ட அவரருளையும் அன்பையும் பெறுதற்கான வழிவ வழிவகைகளை அறிதலும் அதற்கேற்ற முயற்சிகளைச் செய்து நடத்தலுமெல்லாம் புனிதராவா ரெல்லார்க்கும் மெய்யுரிமையாமெனவும் வற்புறுத்து நுவலுஞ் சைவவித்தாந்த உண்மை நெறி பேணும் எம்மனேர்க்காயின் அங்ஙன முரைத்தல் எட்டுணையுஞ் சாலாதென்க.

அற்றேல், நம்மாட்டு நிகபம் இறைவன் செயலுக்கும் நஞ்செயலுக்கும் வேற்றுமை என்னையெனிற், காட்டுதும். பசித்தும் உணவுபெறாமையால் அயர்ந்துறங்கும் மகவினை எழுப்பிப் பால் ஊட்டும் அன்னையின் செயல் போல்வது முதல்வன்றன் அருட்செயல்; அங்ஙனம் எழுப்பி அன்னை தரும் பாலினைப் பருகும் மகவின்செயல் போல்வது நம் போன்ற உயிர்களின் செயல்; இன்னும் அன்னையின் திருக்கொங்கை களிற் பாலமிழ்தினை அமைத்துவைப்பது இறைவன் செயல்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/174&oldid=1592505" இலிருந்து மீள்விக்கப்பட்டது