உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

-

மறைமலையம் - 30

மற்றுப், பால்சுரக்கும் நேரமும் மகவின் பசியும் அறிந்து அப்பாலினைத் தன் மகவுக்கு ஊட்டுவது அன்னையின் செயல்.

இங்ஙனமே, கண் கால் முதலான மிக வியக்கத்தக்க உறுப்புகளொடு கூடிய இவ்வுடம்பை நமக்கு அமைத்துக் கொடுத்து இறைவன் செயல்; இவ்வரிய வுடம்பைப் பெற்ற நாம் அதனைப் பழுதுபடாமற் பாதுகாத்து அதன் துணையால் நம் அறிவையும் அன்பையும் இன்பத்தையும், வளர்த்து இறைவன் றிருவடிப் பேற்றினை எய்துதல் நம் செயல். இவ்வாறு பகுத்து ஆராய்ந்து காணவல்லார்க்கே, இறைவன் நம்பொருட்டுச் செய்யும் படைத்தற்றொழிலைச் சிற்றறிவுடைய நம்மனோர் ஓர் அணுத்துணையுஞ் செய்ய மாட்டுவா ரல்லரென்பதூஉம், அப் படைத்தற்றொழிலைப் பயன்படுத்தித் தம்மறிவையும் அன்பையும் வளர்த்து அம்முகத்தால் தமது ஆணவச் செருக்கை அகற்றிக்கொள்ளாத உயிர்களை ள இறைவன் தனது திருவருளின்பத்திற் படுப்பித்துக் கொள்ள னென்பதூஉம் நன்கு விளங்கும். ஆகவே, குலச்செருக்கு குடிச்செருக்கு செல்வச் செருக்கு கல்விச்செருக்கு முதலான ஆணவக்கறை சிறிதுமின்றி, அன்பினால் அகங்குழைந்துரகி அப்பாரும் அப்பூதிகளும் உடனிருந்து திருவமுதுகொண்டு அளவளாவியதுஞ், சுந்தரரும் பரவை சங்கிலியாரும் காதற்கெழுதகைமையில் விஞ்சி உடலும் உயிருமெல்லாம் ஒன்றாய்ப் பேரன்பினுருவாய் நின்றதும் பிறவுமெல்லாம் அப் பெரியார் தம் அறிவுமுயற்சி அன் பு முயற்சிகளால் மு நிகழ்ந்தனவே யாகுமல்லால், அவையெல்லாம் இறைவன்செயல்க ளாகாவென்று கடைப்பிடித் துணர்ந்து கொள்க.

இவ்வாறன்றி, உயிர்களின் செயல்களை இறைவன் மேலேற்றிக்கூறுதல், கழுவாய் இல்லதொரு பெருங்குற்றமாம் என்பதனையும் உணராது, 'எல்லாம் இறைவன் செயல்', ‘எல்லாந் திருவருட்செயல்' என்று சொல்லிவிட்டமையானே தாம் ஞானக்கடலைக் கரைகண்டவரென நம்பிப், பொது மக்கள் தம்மைப் பாராட்டுவரென்று தமக்கு அவ்வாற்றால் ஒரு பொய்ப் புகழை உண்டாக்கிக் கொள்ளுதலையே விழைந்து, சிவபிரான்றன் இறைமைத் தன்மைக்கும் அடியார் தம் மெய்யன்பின் திறனுக்கும் ஆகாத இழுக்குரைகளை எழுதித் தமது மாயாவாதக் கோட்பாட்டைச் சைவசித்தாந்தம்போற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/175&oldid=1592509" இலிருந்து மீள்விக்கப்பட்டது