உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

151

யாதலால், அவ்விரங்கத்தக்க பயன்படுமக்களை அங்ஙனம் இழித்துரைத்தலினும் பெரியதொரு வன்கண்மை பிறிதில்லை

யென்க.

இனித், தம்மை உயர்ந்த சாதியாராகக் கருதுஞ் சாதிக் சருக்கர்களாவது முடைநாற்றமின்றி நறுமணங்கமழப் L கின்றார்களாவென்று சிறிது கூர்ந்து பார்மின்கள்! காரமும் புளிப்பும் மிகுந்த உணவுகளை உட்கொள்ளலாலும், வெற்றிலை புகையிலை முதலான தீநாற்ற மயக்கப் பொருள்களைக் குழையக் குழைய மெல்லுதலாலும், புகைச் சுருட்டுப் பிடித்தலாலும், மூக்குத்தூள் செலுத்துதலாலும், இன்னும் இவைபோன்ற அருவருப்பான செயல்களைச் செய்தலாலும், மலக்குடலைத் துப்புரவாக து வைத்துக் கொள்ளாமையாலும் பார்ப்பனர் சைவரில் எத்தனையோ பெயர் முடைநாற்றம் உடையவர்களா யிருக்கின்றார்கள்! இவர்கள் கிட்ட வரின் இவர்களின் வாயிலிருந்தும் உடம்பி லிருந்தும் வரும் முடைநாற்றம் பொறுக்கக் கூடியதாயில்லை. அதுவேயுமன்றி, இவர்கள் நோய் கொண்டும் புண்கொண்டும் புழுத்துக் கிடக்கையிலாவது இவர் பிறப்பளவில் தம்மை உயர்ந்த சாதியாராகப் பேசிக்கொண்டது பெரும் பிழையென உணரக் கடவராக! விலக்கப்பட்ட சாதியார் பெரும்பாலும் நோயின்றி வலியயாக்கை யுடையவர்களாய் எல்லார்க்கும் பயன்படுவாராய் நீண்டகாலம் உயிர்வாழ்தலையுந், தம்மை உயர்ந்த சாதியாராகக் கருதிக்கொள்ளும் பார்ப்பனர் சைவர் முதலான ஏனை வகுப்பினரிற் பெரும்பாலார் எலும்புருக்கி ஈளை யானைக்கால் பித்தபாண்டு கொறுக்குப்புண் முதலான கொடுநோய் கொண்டு வலிவிழந்த வுடலினராய் எவர்க்கும் பயன்படாராய் விரைந்து மாய்தலையும் ஒப்பிட்டுக் காணுங்காற், பிறப்பளவிற் பார்ப்பினும் விலக்கப்பட்ட வகுப்பாரே ஏனைப் பார்ப்பனர் சைவர் முதலாயினாரை விடத் தூய யாக்கை யுடையராயிருத்தல் புலனாகா நிற்கின்றது. வ் வியல்புகளையெல்லாம் ஆராய்ந்து பாராமல், உயர்ந்த அம் மக்களைத் தீண்டத்தகாத முடைநாற்றம் முடையரென்பது எவ்வளவு பேதைமை! அது கிடக்க.

இனி, அம்மறுப்புரைகாரர் தீண்டாதவரைக் கோயிலுனுள் விடலாகா தென்பதற்குத், திருநாளைப் போவாரென்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/184&oldid=1592519" இலிருந்து மீள்விக்கப்பட்டது