6.8.1910
31.1.1911
24.2.1911
25.6.1911
27.8.1911
2.2.21912
26.3.1912
3.4.1912
24.1.1913
16.4.1913
மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்
173
விவேகானந்தரின் கர்ம யோகம் என்னும் அருமையான நூலைப்படித்தேன். இரண்டொரு கருத்துகளைத் தவிர விவேகானந்தரின் பொழிவுகள் நெஞ்சை உருக்கும் தன்மையவாய்ச் சைவ சித்தாந்தக் கருத்துக்களுடன் ஒத்துள்ளன.
மார்ச்சு 31 உடன் பணிக்காலம் முடியும் என்ற செய்தி துறவறம் பெறலாம் என்ற எண்ண முடையவனாக இருப்பினும் சிறிது கலக்கத்தைத் தந்தது.
சமரச சன்மார்க்க நிலையம் ஏற்படுத்தினேன். திருக்கழுக் குன்றம் பூசாரிகள் சொல்வது போல் கழுகுகள் காசியில் இருந்து வரவில்லை. அருகில் இருக்கும் குன்றுகளில் இருந்தே வருகின்றன. அவை பழக்கப் படுத்தப்பட்டவை என்று எண்ணுகிறேன். துறவிக்குரிய துவராடை புனைந்தேன்.
அ
இராமலிங்க அடிகள் வடலூர் சபையில் சன்மார்க்கம் பற்றிப் பேசினேன். அடிகள் ஏற்படுத்திய முறைகளை மீறி சடங்குகளை வேண்டுமென்றே சில வைதிகர்கள் தந்நலத்துக்காக நுழைத்தனர் என்று கடிந்து பேசினேன். விவேக பாநுவில் என்னை மறைமுகமாகக் கண்டித்து எழுதிய ஒருவருக்கு மறுமொழியாகச் சாதி வேறுபாடு களைச் சாடிக் கட்டுரை எழுதி வருகிறேன். சாதி முறையை அழித்து மனிதரிடைய சமன்மை கொண்டுவர வேண்டும் என்பதே என் விழைவு என் எளிய முயற்சிகளுக்கு ஈசன் அருளட்டும்.
எ
போலிச் சைவரும் சாதி வேறுபாடும் என்னும் கட்டுரை எழுதி முடித்தேன்.
மேட்டுக் குப்பம் சென்றேன். இராமலிங்க அடிகள் முன்னாளில் அமர்ந்த புனித அரங்குக்குச் சென்றதும் உளம் நெகிழ்ந்து கண்ணீர் பெருகிற்று. என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.
கல்கத்தாவில் சாங்கியமும் சித்தாந்தமும் என்னும் பொருள்பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றினேன்.