177
மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்
1898
3-1-1898 'முதற்குறள்வாத நிராகரணம்’ ஏறத்தாழ 20 பக்கம் எழுதினேன்.
4-1-1898 ‘அறுவகைமரபிற் பார்ப்பனப் பக்கம்' என்னும் தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரத்தை மனப்பாடம் செய்தேன்.
5-1-1898 ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர நாயகரிடமிருந்து அஞ்ச லட்டை வந்தது ... சித்தியாரின் ஆறாம் சூத்திரம் மனப்பாடம் செய்தேன்.
6-1-1898 ‘முதற்குறள்வாத நிராகரணம்’, இன்று எழுதி முடித்தேன்; அதனையும் ‘முதற்குறள்வாத' த்தையும், 'சூ தனிய வாதி மறுப்பு' என்னும் துண்டறிக்கைகையும் பரங்கிமலைச் செயல்பாட்டுப் பொறியாளர் அலுவலகத்தில் எழுத்தராயிருக் கும் திரு. மகாதேவப் பிள்ளைக்கு அனுப்பி வைத்தேன். சித்தியாரின் ஏழாம் சூத்திரத்தை மனப்பாடம் செய்யத் தொடங்கினேன்.
7-1-1898... பகவத் கீதையைத் தமிழ்ப்பாடல் வடிவில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன் : இன்று மூன்று பாடல் எழுதினேன் ...
8-1-1898 சென்னை அரசாங்க மொழிபெயர்ப்பாளர் தண்டலம் பாலசுந்தர முதலியார் அவர்களுக்கு அஞ்சலட்டை விடுத்தேன்.
12-1-1898 பொங்கல் விழாவைச் சிறப்புறக் கொண்டாடி
னேன்....