194
❖ மறைமலையம் - 30
26-12-1902 ‘திராவிடத் தமிழர் தொல்பொருள் ஆய்வுச் சங்கத்'துக்கு நான் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றேன்.
1903
3-1-1903 'தமிழ்க் கழக'த்துக்குரிய விதிமுறைகள் வகுக்கப்பெற்றன.
11-1-1903 கந்தசாமிக் கவிராயரிடமிருந்து கடிதம் வந்தது. 16-1-1903 .... மதுரையிலிருந்து ‘செந்தமிழ்’ வந்தது.
22-1-1993 பேரா. சூலியன் வின்சனுக்கு மடல் விடுத்தேன்.
2-2-1903... சிவனடியார் திருக்கூட்டத்தின் செயலாளர் என்னைச் சைவப்பிரசாரகராக இருக்குமாறு வேண்டினார்; இணங்கினேன்.
26-2-1903 டப்ளின் (Dublin) பல்கலைக்கழகத்தின் செயலாளர்க்கு மடல் விடுத்தேன்.
27-2-1903 ‘மதராஸ் மெயில்' நாளேட்டுக்கு ஒரு கட்டுரை விடுத்தேன்...
7-3-1903 பரிமேலழகரைப் பற்றிக் கட்டுரை வரைந்தேன் 9-3-1903 இலண்டன் மெட்ரிகுலேசன் தேர்வுக்குப் படிக்கத் தொடங்கினேன்.
18-3-1903.... ரூ. 11க்கு Dutts Civilization of India நூல்
வாங்கினேன்.
6-6-1903 குலாம் காதிறு நாவலரவர்களும் பிச்சை இப்ராகிம் புலவரவர்களும் என்னைக் காண வந்தனர்.
14-6-1903 ‘புறச்சமயத்தவர்க்கிருளாய்' முதல் இரண்டடி களைப் பற்றி அருமையான உரையாற்றினேன்....
24-6-1903 திருவடிக்குச் சென்று ‘சைவசமயமே சமயம்’
என்று உரையாற்றினேன்.
29-6-1903 எனது சொற்பொழிவைப் பற்றி ‘ஸ்டாண்டர்டு' 'இந்து' ஆகிய இதழ்களுக்குச் செய்தி விடுத்தோம்.